தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு!

05 Apr, 2020 | 10:40 AM
image

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று நேற்றைய (04) தினம் மாலை  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை டயகம பிரதான வீதியில் அகரகந்த தோட்ட பகுதியில் பிரதான வீதிக்கு அருகாமையிலேயே இவ்வாறு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் முழுமையாக சிதைவடைந்திருந்ததால் குழந்தை உடலின் ஒரு பாகமே கண்டறியப்பட்டுள்ளது.

குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையொன்றே இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சிசுவின் சடலம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இன்று (05.04.2020) முன்னெடுக்கப்பட்டது.

சிசுவின் சடலம் குறித்து நீதவானின் ஸ்தல விசாரணைகளின் பின்னர் - மேலதிக விசாரணைக்காகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸார் ஊடாக சடலம்  நுவரெலியா வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52