முழு உலகையே உலுக்கி வரும் கொரோனாவின் பிடியிலிருந்து தன் நாட்டையும், முழு உலகத்தையும் மீட்டெடுக்கும் பணியில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்கா கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் செயற்பாடுகளில் அதிக கனவம் செலுத்தி வருகின்றது.
அதன் விளைவாக கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்ட தடுப்பூசியொன்றை தயாரிக்கும் முயற்சியில் நோய் எதிர்ப்பு நிபுணர் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் பச்மனும், அவருடைய குழுவினரும் செயற்பட்டு வருகின்றனர்.
இதன் முதற் கட்டமாக, இத்தடுப்பூசியினை எலிகளுக்கு ஏற்றி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.மேலும், இன்னும் இரு வாரங்களில் கண்டிப்பாக, கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை உருவாக்கிவிடுவோம் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் பச்மன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பூசி ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த துகள்கள் உடலில் தேவையான என்டிபாயர்டிகளை தயார் செய்யும். இது நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
கொரோனா வைரஸ் ஸ்பைக் புரத ஏற்பியுடன் பிணைக்கப்பட்டு, தொற்று பரவ அனுமதிக்கிறது. இந்த ஏற்பி ACE-2 என அழைக்கப்படுகிறது.
ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியை மட்டுமே கொண்டு தடுப்பூசி தயாரிப்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது ஏற்பி-பிணைப்பு களம் (RBD) என அழைக்கப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM