கொரோனா நிலையை காரணம் காட்டி கோரப்பட்ட பிணை மனுக்களில் 90 வீதமானவை நிராகரிப்பு

Published By: Digital Desk 3

02 Apr, 2020 | 09:46 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா தொற்றினை கருத்திற்கொண்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை ஏதேனுமொரு பிணை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான மனுக்கள் கொழும்பில் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

அவ்வாறான 90 வீதமான மனுக்களை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

121 பிணை மனுக்கள் இன்று மட்டும்  கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 5 ஆம் இலக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராக சிரேஷ்ட சட்டத்தரணிகள்  குறித்த பிணை கோரிக்கை மனுதாரர்களுக்கு பிணையளிக்க கடும் ஆட்சேபம் வெளியிட்டனர்.

குறிப்பாக இதுவரை சிறைச்சாலைகளில் எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை என இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டி, கொரோனாவை காரணம் காட்டி பாரிய குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தில்  விளக்கமறியலில் உள்ளோர் பிணை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக  வாதிட்டார்.

'கொரோனா தொற்றை காரணமாக முன்வைத்து போதைப்பொருள் கடத்தல்கார்கள் மற்றும் பாரிய குற்றங்களை இழைத்தோர் விடுதலையை பெறுவதற்கு திட்டமிட்டுள்ள இவ்வாறான சதி முயற்சிகளை முறியடிப்பதற்கு சட்ட மா அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குவது நீதிமன்றத்தின் பொறுப்பாகும்'  என அவர்  மன்றில்  சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் போதைப்பொருள் குற்றம், ஏனைய பாரிய குற்றங்களில் ஈடுபட்டோரின் பிணை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58