முழு உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்றின் காரணமாக அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
மேற்படி குழந்தை, கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த பிறந்து 6 வாரங்களே நிரம்பிய குழந்தை என தெரியவந்துள்ளது.
குறித்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து, நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த தகவலை அம்மாநில ஆளுநர் நெட் லமொண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் கவலையுடன் வெளியிட்டுள்ளார். மேலும், பிறந்து 6 வாரங்களேயான குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகி, உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM