திலின கமகே தொடர்பில் நுகே­கொட நீதிவான் வழங்­கிய உத்­த­ரவு தவ­றா­னது

Published By: Raam

22 Jun, 2016 | 09:04 AM
image

சட்ட விரோ­த­மான முறையில் யானைக் குட்­டி­யொன்றை வளர்த்­தமை தொடர்­பி­லான குற்றச் சாட்டு தொடர்பில் சர­ண­டைந்த முன்னாள் கொழும்பு மேல­திக நீதிவான் திலின கமகே தொடர்பில் நுகே­கொட நீதிவான் கனிஷ்க விஜே­ரத்ன வழங்­கிய உத்­த­ர­வுகள் பல சிக்­க­லுக்­கு­றிய தவ­றான விட­யங்­களை உள்­ள­டக்­கி­யுள்­ள­தாக கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று அறி­வித்­தது. இந் நிலையில் திலிண கம­கே­வுக்கு பிணை வழங்­கிய கங்­கொ­ட­வில நீதிவான் கனிஷ்க விஜே­ரத்­னவின் உத்­த­ரவை திருத்­திய கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­லக, பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் பிர­காரம் விஷேட கார­ணி­களைக் கருத்தில் கொண்டு புதிய நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் திலிண கம­கே­வுக்கு பிணை வழங்­கினார்.

நுகே­கொட நீதி­வானின் உத்­த­ரவை எதிர்த்து சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்த மீளாய்வு மனு மீதான விசா­ர­ணைகள் நேற்று இடம்­பெற்ற போதே புது நிபந்­த­னை­களின் பிர­காரம் முன்னாள் நீதி­வா­னுக்கு இந்த பிணை வழங்­கப்­பட்­டது. திலிண கம­கே­வுக்கு எதி­ராக உள்ள குற்றச் சாட்டு பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் வராது என நுகே­கொட நீதிவான் அளித்த உத்­த­ரவை திருத்­திய மேல் நீதி­மன்றம் அவ­ருக்கு எதி­ரான குற்றச் சாட்டு பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழேயே உள்­ளது எனவும் குறிப்­பிட்­டது.

மேலோட்­ட­மாக பார்க்கும் போதே அதனை அவ­தா­னிக்க முடி­வ­தா­கவும் , மூன்று விஷேட கார­ணி­களின் அடிப்­ப­டையில் சந்­தேக நப­ரான திலிண கம­கே­வுக்கு 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான மூன்று சரீரப் பினை­களில் செல்ல அனு­ம­திப்­ப­தா­கவும் மேல் நீதி மேல்­நீ­தி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

அத்­துடன் சந்­தேக நப­ரான திலிண கம­கேவின் வெளி நாட்டு பய­ணத்தை தடை செய்து அவரின் கடவுச் சீட்டை நீதி­மன்ற கட்­டுப்­பாட்டில் வைக்க உத்­த­ரவு பிறப்­பித்த நீதி­பதி, ஒவ்­வொரு ஞாயி­றன்றும் காலை 9.30 மணிக்கும் நண்­பகல் 12.30 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்­துக்கு சென்று கையொப்­ப­மி­டவும் உத்­த­ர­விட்டார். பிணை நிபந்­த­னை­களை மீறும் பட்­சத்தில் பிணையை ரத்து செய்து வழக்கு முடியும் வரை சந்­தேக நபரை விளக்­க­ம­றி­யலில் வைப்­ப­தா­கவும் நீதி­பதி எச்­ச­ரித்தார்.

சகுரா என்ற யானைக் குட்­டியை சட்ட விரோ­த­மாக வைத்­தி­ருந்தார் என்ற குற்றச் சாட்டில் முன்னாள் கொழும்பு மேல­திக நீதிவான் திலிண கம­கே­வுக்கு எதி­ராக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். இதன்­போது அவரை கைது செய்­வ­தற்­காக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நட­வ­டிக்கை எடுத்த போது, சட்­டத்­த­ர­ணிகள் ஊடாக அவர் நுகே­கொட நீதிவான் கனிஷ்க விஜே­ரத்ன முன்­னி­லையில் சர­ண­டைந்தார். இத­னை­ய­டுத்து கடந்த ஜூன் 2 ஆம் திகதி சந்­தேக நப­ரான திலிண கம­கே­வுக்கு பிணை வழங்­கிய நுகே­கொட நீதி­மன்றம் அவர் மீது குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் குற்றம் சுமத்­து­வது அடிப்­ப­டை­யற்­றது எனவும் அக்­குற்றச் சாட்­டுக்கள் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டதின் கீழ் வராது எனவும் பிணைத் தீர்ப்பில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந் நிலை­யி­லேயெ நுகே­கொட நீதி­வானின் குறித்த உத்­த­ர­வுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து கடந்த 7 ஆம் திகதி சட்ட மா அதி­பரால் கொழும்பு மேல் நீதி­மன்றில் மீளாய்வு மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டது. அதன்­படி நுகே­கொட நீதி­வானின் உத்­த­ர­வுக்கு நேற்று வரை இடைக்­கால தடை வித்­தி­ருந்த கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்­றைய தினம் சந்­தேக நப­ரான முன்னாள் நீதிவான் திலிண கம­கேவை மன்றில் ஆஜ­ரா­கவும் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது.

நேற்­றைய தினம் இது குறித்த வழக்கு விசா­ர­ணைகள் கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க அறையில் நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­லக முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­ல­கவின் உத்­த­ர­வுக்கு அமைய திலிண கமகே, நுகே­கொட நீதிவான் நீதி­மன்றின் பதி­வாளர் ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கினர்.

சந்­தேக நப­ரான திலின கமகே சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அணில் சில்­வாவின் தலை­மையில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி காலிங்க இந்­தி­ர­திஸ்ஸ, சிரேஹ்ச்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரண உள்­ளிட்ட சுமார் 20 சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கினர். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட சட்­ட­வாதி திலீப பீரிஸும் சிரேஷ்ட சட்­ட­வ­டஹி ஜனக பண்­டா­ரவும் மன்றில் ஆஜ­ரானர்.

வழக்கு விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்ட போது முதலில் அரச சட்­ட­வாதி திலீப பீரிஸ் மன்றில் வாதங்­களை முன்­வைத்தார்.

"சந்­தேக நப­ரான திலின கம­கே­வுக்கு எதி­ரான குற்றச் சாட்­டுக்கள் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழா­னவை. எனினும் நுகே­கொட நீதிவான் அதனை அதன் கீழ் வராது என தெரி­வித்­துள்ளார். அத்­துடன் நுகே­கொட நீதி­வா­னுக்கும் சந்­தேக நப­ருக்கும் இடை­யி­லான தனிப்­பட்ட உறவு தொடர்பில் நான் ஆட்­சே­பனம் முன்­வைத்தேன். அத­னையும் அவர் கண்­டு­கொள்­ள­வில்லை. பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நாம் முன்­வைத்த குற்றச் சாட்­டுக்­களை மறுத்து பிணை சட்­டத்தின் கீழேயே நுகே­கொட நீதிவான் சந்­தேக நப­ருக்கு பிணை­ய­ளித்­துள்ளார். இது முற்­றிலும் தவ­றான அனு­கு­மு­றை­யாகும்.

இத­னை­விட சந்­தேக நப­ருக்கு மன்றில் சிறப்பு சலு­கைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் நுகே­கொட நீதி­மன்றின் பதி­வாளர் மன்ரை அவ­ம­திக்கும் வித­மாக நடந்­து­கொன்­டுள்ளார். வழக்குப் புத்­த­கத்தை மேல் நீதி­மன்றில் ஒப்­ப­டைக்க இந்த மன்று கட்­ட­ளை­யிட்டும் அவர் இன்­றைய தினமே அப்­புத்­த­கத்தை மன்­றுக்கு வழங்­கி­யுள்ளார். இது மன்றை அவ­ம­திக்கும் செயல் என வாதிட்டார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர் சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா, தனது சேவை பெறுநர் மன்­றுக்கு கட்­டுப்­பட்டே நடப்­ப­தா­கவும் அவர் மன்று அழைத்­த­போ­தெல்லாம் மன்றில் ஆஜ­ரா­கி­யுள்­ளதால் பிணை வழங்­கு­வதில் சிக்கல் இல்லை என குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து நீதி­பதி மணி லால் வைத்­தி­ய­தி­லக மன்றை 10 நிமி­டங்­க­ளுக்கு மீளாய்வு மனுவில் தீர்ப்பு வழங்க ஒத்­தி­வைத்தார்.

10 நிமி­டங்­களில் மீளவும் மன்றின் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில் சட்ட மா அதி­பரின் மீளார்வு மனு மீதான தீர்ப்பை நீதி­பதி அறி­வித்தார்.

அரச சட்­ட­வா­தியின் வாதங்­களை இந்த மன்று பூர­ண­மாக கவ­னத்தில் கொள்­கி­றது. அத்­துடன் இந்த வழக்­குடன் தொடர்­பு­டைய அடிப்­படை வழக்குப் புத்­தகம் மன்­றுக்கு கிடைத்­துள்ள நிலையில் அத­னையும் மன்று ஆராய்ந்­தது.

இதில் வழக்குப் புத்­த­கத்தின் 741 ஆவது பக்கம் மீது மன்றின் அவ­தானம் செலுத்­தப்­ப­டு­கி­றது. அதில் இந்த வழக்­குடன் தொடர்­பு­டைய யானைக் குட்டி பொதுச் சொத்து என்­ப­தற்­கான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் மதிப்­பீட்டு அறிக்கை உட்­பட அனைத்தும் உள்­ளன. அத­ன­டைப்­ப­டையில் மேலோட்­ட­மாக பார்க்கும் போது இந்த யானைக் குட்டி விவ­காரம் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

எனவே நுகே­கொட நீதிவான் இது பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் வராது என அளித்த உத்­த­ரவு தவ­று­க­ளுடன் கூடி­யது. இந் நிலையில் கடந்த 2 ஆம் திகதி வழங்­கப்­பட்ட சந்­தேக நப­ருக்­கான பினை உத்­த­ரவு தொடர்­பிலும் இந்த மன்று கவனம் செலுத்­து­கி­றது.

அதன்­படி சந்­தேக நப­ரான திலின கமகே தாமாக வந்து நீதி­மன்றில் சர­ண­டைந்­துள்ளார். அத்­துடன் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கும் வாக்கு மூலம் வழங்­கி­யுள்ளார். அத்­துடன் அவர் நீதிச் சேவையில் அதா­வது மஜிஸ்­திரேட் ஆக கட­மை­யாற்­றி­யுள்ளார். இந் நிலையில் அவர் நீதி­மன்றை புரக்­க­ணிப்பார் என கொள்ள முடி­யாது. ஆகவே அந்த மூன்று கார­ணி­க­ளையும் விஷேட நிலை­மை­யாக கருதி இந்த நீதி­மன்றம் பிணையில் செல்ல அவ­ருக்கு அனு­ம­தி­ய­ளிக்­கி­றது.

அதன்­படி 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல சந்­தேக நபரை இந்த மன்­று­அ­னு­ம­திக்­கி­றது. பிணை­யா­ளர்­களில் ஒருவர் அர­சாங்­கத்தின் நிறை­வேற்று அதி­கா­ரி­யாக இருக்க வேண்டும். அத்­துடன் சந்­தேக நபர் வெளி நாடு செல்ல முடி­யாது. கடவுச் சீட்டை மன்றில் ஒப்­ப­டைக்­கவும். இத­னை­விட ஒவ்­வொரு ஞாயிறு தினமும் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ராகி கையெ­ழுத்­தி­ட­வேண்டும். இந்த நிபந்­த­னை­களை மீறும் பட்­சத்தில் சந்­தேக நபரின் பிணை ரத்துச் செய்­யப்­பட்டு வழக்கு முடியும் வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­ப­டுவார் என நீதி­பதி மணிலால் வைத்­திய திலக அறி­வித்தார்.

உத்­த­ரவை அடுத்து சட்­டமா அதிபர் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­ட­வாதி திலீப பீரிஸ்­பின்­வ­ரு­மாறு மன்றில் பிரஸ்­தா­பித்தார்.

' நீதி­ப­தியின் உத்­த­ர­வுக்கு தலை வணங்­கு­கிறோம். மக்கள் நீதி­மன்றம் மீது கொன்­டுள்ள நம்­பிக்கை அதி­க­ரிக்கும் வண்னம் நீதி­மன்­றங்கள் செயற்­பட வேண்டும். சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வா­ன­தாக அமைய வேண்டும். இன்று கூட இந்த மன்­றுக்கு சந்­தேக நப­ரான திலின கமகே, நீதி­பதி பயன்­ப­டுத்தும் சிறப்பு வழி­யூ­டா­கவே வந்தார். இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் ஒரு சாதா­ரண நப­ருக்கு எதி­ரான விசா­ர­ணையில் இடம்­பெ­றுமா? அல்­லது இடம்­பெற்றால் அது தொடர்பில் எடுக்­கப்­படும் நட­வ­டிக்கை இப்­ப­டித்தான் இருக்­குமா/ மக்­க­ளுக்கு நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் மீது நம்­பிக்கை வர வேண்டும். அவ்­வாறு நம்­பிக்கை ஏர்­படும் வண்னம் மன்ரின் நட­வ­டிக்­கைகள் இஒருக்க வேண்டும்.

அத்துடன் இது குறித்த அடிப்படை வழக்கு நாளை மறு தினம் ( நாளை) நுகேகொட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அப்படியானால் இத்தகைய தவறான உத்தரவை வழங்கிய நீதிவான் முன்னிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது குறித்து அவசரமாக ஆராயப்படல் வெண்டும். நீதிச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் ஊடாக இவ்வழக்கை விசாரிக்க வேறு ஒரு நீதிவானை நியமிக்க மேல் நீதிமன்றம் அவரது அவதானத்துக்கு இவ்விடயத்தை கொண்டு செல்ல வேண்டும். என்றார்.

இதனையடுத்து ஜனதிபதி சட்டத்தரணி அணில் சில்வா நீதிமன்ற உத்தரவை அப்படியே ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கவே மீளாய்வு விசாரணைகள் நிறைவுக்கு வந்தன. நுகெகொட நீதிமன்றுக்கு சென்று பிணை நிபந்தன்பைகளை பூர்த்தி செய்ய சந்தேக நபருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடிவுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12
news-image

தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை...

2025-02-19 20:24:54
news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09