கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க யுத்த கப்பலில் சிக்குண்டுள்ள கடற்படையினரை காப்பாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கப்பலின் தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்டின் தளபதியான பிரெட் கிரெஜைர் இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நாங்கள் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கவில்லை,மாலுமிகள் மரணிக்கவேண்டிய தேவையில்லை என குறிப்பிட்டுள்ள கப்டன் எங்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய சொத்துக்களாக மாலுமிகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறுகின்றோம் என தெரிவித்துள்ளார்.
போர்க்கப்பலில் வைரஸ் தொடர்ந்து பரவுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்க்கமான நடவடிக்கை அவசியம் என தெரிவித்துள்ள கப்பலின் தளபதி அமெரிக்காவின் அணுவாயுத விமானந்தாங்கி கப்பலில் இருந்து கடற்படையினரை அகற்றி இரண்டு வாரங்களிற்கு தனிமைப்படுத்துதல் என்பது மிகவும் கடினமான நடவடிக்கையாக தோன்றலாம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இது எடுக்கப்படவேண்டிய அவசியமான ஆபத்தான நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இதன் மூலம் மாலுமிகளின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன் கப்பல் கூடிய விரைவில் மீண்டும் இயங்குவதை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
4000 இளம் ஆண்களையும் பெண்களையும் கப்பலில் வைத்திருப்பது அனாவசியமான ஆபத்தை உருவாக்கும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள போர்க்கப்பலின் தளபதி கடற்படையினரின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM