பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஸ்திரமான முடிவை அரசாங்கம் வழங்க வேண்டும் - விஜித் விஜயமுனி சொய்சா

Published By: Vishnu

30 Mar, 2020 | 06:02 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்த நெருக்கடியான நிலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளமை குறித்து அவதானம் செலுத்த வேண்டும். தேசிய பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இவர்கள் பற்றி விசேட கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஸ்திரமான முடிவொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

இன்று அவரது பேஸ்புக் பக்கத்தில் காணொளியொன்றை பதிவு செய்துள்ள அவர் அதில் மேலும் கூறுகையில்,

சமுர்தி பயனாளிகள் அனைவருக்கும் எவ்வித பேதமும் இன்றி அரசாங்கத்தினால் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் அரசியல் , பொருளாதார இலாபத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போதுள்ள சூழல் நன்மையானாலும் தீமையானாலும் நாம் மக்கள் பக்கமிருந்து சிந்திக்க வேண்டும். அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைவருக்கும் எனது கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போன்று இராணுவம் மற்றும் பொலிஸாரின் அர்ப்பணிப்பிற்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

இருந்த போதிலும் இந்த நெருக்கடியான நிலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளமை குறித்து அவதானம் செலுத்த வேண்டும். தேசிய பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இவர்கள் பற்றி விசேட கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஸ்திரமான முடிவொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்.

சமுர்தி பயனாளிகளுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறி தற்போது 5000 ரூபாவே வழங்கப்படவுள்ளது. அனைத்து சமூர்தி பயனாளிகளுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமா என்பதே எமது கேள்வியாகும். கட்சி , இனம் , மதம் என்ற எவ்வித பேதமும் இன்றி அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுடன் ஏனைய தினக் கூலிக்கு வேலை செய்பவர்கள் குறித்தும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேரடி கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம். இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் அரசியல் , பொருளாதார இலாபம் கிடைக்கும் என்பதாலேயே இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09