கல்பிட்டி கடற்படை முகாமில் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் கைது!

Published By: Vishnu

30 Mar, 2020 | 04:20 PM
image

கல்பிட்டி, முகத்துவாரம் பகுதியில் உள்ள கடற்படை முகாமில், கடற்படை அதிகாரியை சுட்டுக் கொலை செய்தமை மற்றும் மேலும் இருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடற்படை முகாமில் சேவையில் ஈடுபட்டு வந்த மேலும் ஒரு கடற்படை அதிகாரியே குறித்த துப்பாக்கிச் சூட்டை சனிக்கிழமை இரவு மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந் நிலையிலேயே சந்தேக நபர் இன்றைய தினம் கல்பிட்டி கடற்படை முகாமில் சரணடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்டு, கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01