இந்தியாவிலிருந்து 10ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்பியவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்..!

Published By: J.G.Stephan

29 Mar, 2020 | 02:48 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் இலங்கையிலும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் இம்மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவு செய்யுமாறு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



இராஜகிரியவிலுள்ள கொவிட்-19 பரவலைக் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் இருவர் இந்தியாவின் சென்னை நகருக்கு சென்று திரும்பியவர்களாவர். எனவே தான் சமூக பாதுகாப்பு கருதி இந்தியா சென்று திரும்பியவர்கள் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

தொற்று நோயான இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஊரடங்கு சமூக நலன்கருதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போது அதனை முறையாகக் கடைபிடித்து அரசாங்கத்துக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

அத்தோடு இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் தமது வீடுகளிலேயே 14 நாட்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17