கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு அஸ்கிரிய - மல்வத்து பீடங்கள்  2 கோடி ரூபா நிதியுதவி !

28 Mar, 2020 | 07:16 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா ஒழிப்பிற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்காக அஸ்கிரிய, மல்வத்து பீடம் மற்றும் தலதா மாளிகை என்பன 2 கோடி ரூபா நிதியுதவியளித்துள்ளன.

இன்று  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர்  மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த போதே இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றார். கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு தியவதன நிலமே நிலங்க தேலவினால் ஒரு கோடி ரூபா ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்து கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி விளக்கினார்.

மகாநாயக்க தேரரும் அந்நிதியத்திற்கு 50 லட்சம் ரூபா நிதியினை அன்பளிப்பு செய்தார். ஜனாதிபதி மல்வத்து அநுநாயக்க தேரர் நியங்கொட விஜிதசிறி தேரரையும் சந்தித்தார்.

அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி, மகாநாயக்க தேரர் உள்ளிட்ட அஸ்கிரிய பீடத்தின் மகா சங்கத்தினருக்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி விளக்கினார்.

கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு அஸ்கிரி விகாரையினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 50 லட்சம் ரூபா மற்றும் மல்வத்தை, அஸ்கிரி விகாரைகளிடமிருந்து கிடைத்த ஆசிர்வாதங்களுக்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53