(இரா.செல்வராஜா)
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்காவும் சீனாவும் உதவிகளை வழங்கியுள்ளன.
இரசாயன ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்துதல், நோயுற்றவர்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கல் போன்ற நடவடிக்கைகளுக்காக 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
கடந்த 20 வருடகாலத்தில் அமெரிக்கா சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சீனா இன்று விமானம் மூலம் மருந்துவகைகளை அனுப்பிவைத்துள்ளது. இதில் 50 ஆயிரம் முகக்கவசங்கள், நோய்த்தடுப்பு அங்கிகள் ஆகியன அடங்கியுள்ளன.
நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மற்றுமொரு விமானத்தில் மேலும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க இருப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM