கூலிவேலை செய்வோர், சுயதொழில் முயற்சியாளர்களுக்கு அவசர உதவி வழங்க வேண்டும் - சஜித்

27 Mar, 2020 | 05:52 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலையின் காரணமாக அன்றாடக் கூலிவேலை செய்வோர், சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

எனவே அரசாங்கம் தலையீடு செய்து அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதுடன் இ உணவுப்பொருட்களைப் பெற்றுக்கெர்டுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் காணொளிப் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலினால் நாடு என்ற வகையில் பாரிய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் இத்தருணத்தில், நாமனைவரும் ஒன்றிணைந்து, இச்சவாலை எதிர்கொள்வதன் ஊடாக இதிலிருந்து மீளக்கூடிய சக்தி எம்மிடம் இருக்கிறது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்நின்று செயற்படும் அனைத்து சுகாதார சேவையாளர்கள்இ முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எமது மனமார்ந்த நன்றியையும் கூறிக்கொள்கிறேன்.

இன்றளவில் அன்றாடக் கூலிவேலை செய்வோர்இ சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் அரசாங்கம் தலையீடு செய்து அனைவருக்கும் ஓர் அடிப்படை நிவாரணத்தை வழங்கிஇ உணவையும் பெற்றுக்கெர்டுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களை முன்நிறுத்திய அந்தப் பொறுப்பிலிருந்து ஒருபோதும் விலகக்கூடாது என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்.

சமுர்த்திப் பயனாளிகளுக்கான கொடுப்பனவைப் பொறுத்தமட்டில் ஒரு தொகுதியினருக்குத் தற்போது வழங்குவதற்கும், மற்றொரு தொகுதியினருக்குக் கொடுப்பனவைத் தாமதப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது சமுர்த்திப் பயனாளிகளை இரு தொகுதியாகப் பிரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே அக்கொடுப்பனவை சமுர்த்திப் பயனாளிகள் அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விவசாயம், பயிர்ச்செய்கை மற்றும் மீன்பிடி ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தவர்களும் தற்போதைய நெருக்கடி நிலையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54