யாழ்.தீவகனம் அனலைதீவுப் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் சுகாதார துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அனலதீவு பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் ரஸ்ய நாட்டிற்கு சென்று வந்த நிலையிலேயே அவர் சுகாதார துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபரை யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது.
இதற்காக காங்கேசன்துறை கடற்படையினருடைய உதவி கோரப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த உதவி கோரப்பட்டு 3 மணித்தியாலங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கடற்படையினர் அங்கு இதுவரை செல்லவில்லை.
இதனால் குறித்த நபர் சுகாதார துறையினருடைய கண்காணிப்பில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM