தனிமைப்படுத்தலில் வெளிநாடு சென்று திரும்பிய 3 குழந்தைகள்

Published By: Vishnu

26 Mar, 2020 | 03:29 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்து அண்மையில் பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களில் குறிப்பிடப்பட்ட மூன்று குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் பாதுகாப்பான முறையில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

அண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்ய வேண்டும் என்று பொலிஸ் தலைமையகத்தினால் கோரப்பட்டது.

எனினும் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதிலும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் தகவல்கள் வெளியிடப்பட்டன.

அவ்வாறு வழங்கப்பட்ட தகவல்களில் முதலாம் இலக்கமிடப்பட்டிருந்த Bethany Nihinsa Somapalage  இரண்டாம் இலக்கமிடப்பட்டிருந்த Martina Hakmana Vidana Arachchige மற்றும் மூன்றாம் இலக்கமிடப்பட்டிருந்த Shenol Abaheesha Vindiv Hewage என்ற குழந்தைகள் மூவரும் அவர்களது பெற்றோருடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே மேற்குறிப்பிட்ட குழந்தைகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அத்தோடு இது தொடர்பில் குறித்த குழந்தைகளுடைய பெற்றோர் ஏதேனும் அசௌகரியங்களுக்கு கவலை தெரிவித்துக் கொள்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11