மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவும் தேசிய ரீதியில் மருத்துகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் தீர்மானம்

Published By: Vishnu

26 Mar, 2020 | 02:50 PM
image

(இராஐதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்காக நாடு தழுவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் பொதுமக்கள் அத்தியாவசிய  மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் எவ்வித தடைகளும் ஏற்படாத விதத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவும் இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்யவும், தேசிய மட்டத்தில் தயாரிக்கப்படும் மருத்துகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஒழிப்பு ஜனாதிபதி செயலனி குழு தலைவர், முன்னாள் அமைச்சர்  பசில் ராஜபக்ச மற்றும் தேசிய மருத்து உற்பத்தியாளர்களுக்கு இடையிலான  சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பொது மக்கள் அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்ளதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்துகளை பெற்றுக் கொள்ளதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளமை கவனத்திற்குரியது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தேசிய மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தற்போதைய தேவைக்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் தற்போது நெருக்கடி காணப்படுவதாக மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்தார்கள் .

இந்திய சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரையாடிய பின்னர் இறக்குமதிகளை துரிதப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெறுபவர்களுக்கும் முழுமையான சேவை வழங்குமாறும் பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43