தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து இன்று வெளியேறியது 3 ஆவது குழு!

Published By: Vishnu

26 Mar, 2020 | 02:46 PM
image

கண்டகாடு, புனாணை, தியதலாவா மற்றும் மியான்குளம் ஆகிய இடங்களில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனையை நிறைவுசெய்த சமார் 223 பேர் கொண்ட குழுவொன்று இன்று காலை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

கண்டக்காட்டிலிருந்து 42 பேரும், பூனாணையிலிருந்து 125 பேரும், தியத்தலாவையிலிருந்து 38 பேரும் மியான்குளத்திலிருந்து 18 பேரும் இவ்வாறு விடுவிக்கப்பட்டு, அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. 

இதேபோல், 144 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் நேற்று காலை தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு செல்வதற்கு இராணுவத்தால் பேருந்துகள் மற்றும் லொறிகள் வழங்கப்பட்டன. 

46 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 31 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 

(மார்ச் 1-15) காலப்பகுதியில் நாடு திரும்பிய 20,000 பேர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் உட்பட சுமார் 7500 நபர்கள் இன்னும் சுய தனிமைப்படுத்தலில் அல்லது தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதாக கொவிட் எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08