ஆப்கான் தலைநகரில் சீக்கியர்களின் குருத்வாரா மீது இனந்தெரியாத ஆயுததாரிகளும் தற்கொலைகுண்டுதாரிகளும் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சீக்கிய வழிபாட்டுதலத்தின் வளாகத்திற்குள் காணப்பட்ட 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர், எட்டுபேர் காயமடைந்துள்ளதுடன் 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலமணிநேரம் சீக்கியர்களின் வழிபாட்டுதலம் மீது இடம்பெற்ற தாக்குதலை பின்னர் ஆப்கான் படையினர் முறியடித்துள்ளனர்.
ஆயுததாரிகள் அந்த பகுதியை சுற்றிவளைத்து தாக்குதலை மேற்கொண்ட பின்னர் படையினர் அவர்களின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மோதல் பல மணிநேரம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையொன்றின் சடலம் உட்பட் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் காபுலின் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குருத்துவாரில் தாக்குதல் இடம்பெற்றவேளை காணப்பட்ட மொகான் சிங் என்பவர் சத்தம் கேட்டதும் மேசையின் கீழ் ஒளிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் வெடிப்புசத்தங்கள் கேட்டன அவை கைக்குண்டுகளாகயிருக்கவேண்டும்என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் போது கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததன் காரணமாக தான் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அழுதபடி காணப்படும் குழந்தைகளை ஆப்கானிஸ்தான் படையினர் மீட்டுச்செல்லுங்கள் படங்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட பகுதியில் வழிபாட்டிற்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்தவேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM