யாழில் தாராளமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன : குடும்பதிலிருந்து ஒருவர் மாத்திரம் வருக - யாழ்.வணிகர் கழகம்

23 Mar, 2020 | 04:49 PM
image

(தி.சோபிதன்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தாரளமாக உள்ளது என தெரிவித்துள்ள யாழ்.வணிகர் கழக உப தலைவர் ஜெயசேகரம் வர்த்தக நிலையங்களுக்கு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே மக்கள் வீணாக குழப்பங்கள் அடைய வேண்டாம். மேலும் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் காலையில் எடுக்கப்பட்டவுடனேயே அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்று கூட வேண்டாம். குடும்பத்தில் இருந்து ஒருவர் வீதம் வருகை தந்து தேவையான பொருட்களை வாங்கி செல்லுங்கள். அத்துடன் வர்த்தக நிலையத்திற்கு வருகை தரும் அனைவரும் தனி நபர் சுகாதாரத்தை பேணிக் கொள்ளுங்கள்.

குறிப்பாக மக்கள் பொருட்களை வாங்கும் போது நெருக்கமாக நிற்காது இடைவெளி விட்டு நில்லுங்கள்.தேவையான பொருட்கள் தாரளமாக இருப்பதால் மக்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டாம்.

யாழ்ப்பான வர்த்தகர்கள் கொழும்புக்கு சென்று தேவையான பொருட்களை எடுத்து வர அவர்களுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாரவூர்த்திகளுக்கு பாஸ் நடைமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

வர்த்தகர்கள் தேவையான பொருட்களை எடுத்து வருகின்றனர்.மக்கள் இவற்றை கருத்தில் கொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள நோய்த்தக்கதில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00