அநுராதபுர சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும் : செல்வம்

22 Mar, 2020 | 10:29 AM
image

(ஆர்.ராம்)

அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக அவர்களை பிறிதொரு சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் செவ்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைசாலையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினை அடுத்தே இவ்வாறான கோரிக்கையை தான் அநுராதபுரச் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரியை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைகைதிகள் போராட்டத்தினை முன்னெடுக்க முயன்றதாக கூறப்பட்டு பின்னர் சிறை உடைப்பில் ஈடுபட்டமையால் எழுந்த பதற்றத்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் சிறைச்சாலையின் உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்றிந்துகொண்டேன். அத்துடன் அவர்களை அண்மைய நாட்களில் ஏனைய கைதிகளுடன் இணைத்துள்ளமையை அறிந்தமை தொடர்பில் குறிப்பிட்டதோடு அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கோரிக்கை விடுத்திருந்தேன்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை அந்த அதிகாரி என்னிடத்தில் உறுதியாக தெரிவித்தபோதும், தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தினை அவரிடத்தில் வலியுறுத்தி அவர்களை உடனடியாக வேறு சிறைச்சாலைகளிற்கு மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அதுமட்டுமன்றி கொரோனா தொற்றின் ஆபத்தினை உணர்ந்து அரசாங்கம் தற்காலிமாக அவர்களை விடுதலை செய்வதற்குரிய நடவக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பகிரங்க கோரிக்கையையும் இச்சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18