உணவு பழக்கவழக்கங்களின் மாற்றத்தாலும், அதன் எண்ணிக்கை உயர்வாலும் வியாதி மற்றும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இயற்கை உணவைத் தவிர்த்து தற்போது ஏராளமானவர்கள் செயற்கை முறையில் வண்ணம் மற்றும் சுவையூட்டப்பட்ட உணவுப் பொருட்களையும், துரித உணவு வகைகளையும், ஜங்க் ஃபுட் எனப்படும் பாக்கற்றுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களையும் சாப்பிட தொடங்கிவிட்டார்கள்.
இதனால் அசிட் பிரச்சினை அல்சர், ஜீ ஆர்டி எனப்படும் பாதிப்பு ஆகியவை ஏற்படுகிறது. அல்சர் பாதிப்பை கண்டறியாமலோ அல்லது அலட்சியப்படுத்தியோ இருக்கும் போது அது நாள்பட்ட அல்சராக மாறியதுடன் இல்லாமல் புற்றுநோயையும் உருவாக்கிவிடுகிறது. இதனையும் எண்டாஸ்கோப்பி மூலம் கண்டறிந்து தொடர் மற்றும் கூட்டு சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம். எண்டாஸ்கோப்பி என்ற கருவியின் அறிமுகம் மற்றும் செயல்பாட்டிற்கு பின் இந்த துறை அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. முன்பெல்லாம் வயிற்றில் ஏதேனும் பிரச்சினை என்றால் சத்திர சிகிச்சை செய்து தான் என்னவென்று கண்டறியவேண்டியதிருக்கும். தற்போது பெருங்குடல் பகுதி மற்றும் சிறுகுடல் பகுதி என தனித்தனியாக எண்டாஸ்கோப்பி மூலம் பார்த்து சிக்கல் என்ன என்பதை துல்லியமாக கண்டறிய முடிகிறது” என்று இத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நவீன சிகிச்சைகள் குறித்து எம்முடன் இயல்பாக பேசுகிறார் டொக்டர் A.C.அருண். இவர் மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகவும், அனுபவம் வாய்ந்த மருத்துவராகவும் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பசி எடுக்கும் போது சாப்பிடுவது ஒரு பழக்கம். அதே போல் காலை மதியம் இரவு ஆகிய நேரங்களில் உணவு சாப்பிடுவதை தவிர்க்ககூடாது என்கிறார்கள். எந்த நேரங்களில் எம்மாதிரியான உணவை எடுத்துக் கொள்ளவேண்டும்? எதனை தவிர்க்கவேண்டும்?
காலையில் எட்டு மணிக்கு முன்னர் காலை உணவும், மதியம் இரண்டு மணிக்கு முன்னர் மதிய உணவையும், இரவு எட்டு மணிக்கு முன்னர் இரவு உணவையும் சாப்பிடவேண்டும். இது தான் உடலியல் அமைப்பில் இயங்கும் சக்கரத்திற்கான தேவைப்படும் விசயம். அதே போல் இரவு உறங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னர் நாம் சாப்பிட்டு முடித்துவிடவேண்டும். அல்லது சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்கச் செல்லவேண்டும். அதே சமயத்தில் அகால வேளையில் பின்னிரவில் உணவு சாப்பிடக்கூடாது. அதனால் எம்முடைய உடலியல் சக்கரத்தின் இயக்கத்திற்கு இந்த நேரந்தவறாமை இருக்கவேண்டும். இதனை நாம் முறிக்கும் போதோ அல்லது அலட்சியப்படுத்தும் போதோ என்னவாகும் என்றால், உடலில் அமிலங்களின் உற்பத்தி மற்றும் செயல்பாடுகளில் சமச்சீரற்றத்தன்மை தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு அல்சர் என்ற பாதிப்பை உருவாக்கும். அதேபோல் இரவு வேளையில் அதிகளவில் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
தற்போதைய நிலையில் காலை மற்றும் மதிய வேளைகளில் சரியாக சாப்பிடாமல் இரவு வேளையில் ஆற அமர அதிகளவில் சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாகவும் நம்முடைய உடலில் அமிலங்களின் உற்பத்தி பாதிப்படைகிறது. இதன் மூலம் நம் உடலின் எடை அதிகரிப்பிற்கு நாமே காரணமாகி விடுகிறோம். இரவு நேரங்கழித்து தான் உணவை சாப்பிடமுடியும் என்ற நிலையில் இருப்பவர்கள், மாலை வேளையில் சிறிதளவு சத்தான நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதில் தவறில்லை.
நெஞ்செரிச்சல் என்பது எதன் அறிகுறியாக எடுத்துக் கொள்ளவேண்டும்?
அல்சர் பாதிப்பிற்கும், இதய பாதிப்பிற்கும் ஒரே அறிகுறியாக இருப்பது நெஞ்செரிச்சல். இதனால் தான் ஏராளமானவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதில் குழப்பம் ஏற்படுகின்றன. மேலும் சிலருக்கு நெஞ்சடைப்பது போன்ற உணர்வு இருக்கும். இவை சாதாரண வாய்வு தொல்லை என்று கருதி பெரும்பாலானோர் மருந்துகடைகளில் இதற்கான மருந்துகளை கேட்டு வாங்கி சாப்பிட்டு நிவாரணம் தேடிக் கொள்கிறார்கள். ஆனால் இது தவறு. நெஞ்செரிச்சல், நெஞ்சடைப்பு, நெஞ்சில் சிறிய வலி ஆகியவை தோன்றினால் உடனடியாக ஒரு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது தான் சரியான தீர்வு. நாமே அவதானிப்பதை விட பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை மேற்கொள்வது தான் இதய பாதிப்பு மற்றும் அல்சர் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ளும் சிறந்த வழிமுறை.
ஃபேட்டி லீவர் இருப்பவர்கள் எம்மாதிரியான விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்?
உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு அதாவது உடற்பருமன் என்ற குறிப்பிட்டவர்களுக்குத்தான் இந்த ஃபேட்டி லீவர் (Fatty Liver) பொதுவானதாக காணப்படுகிறது. அதாவது உடலில் கூடுதலாக இருக்கும் கொழுப்பு சத்துகள் கல்லீரலிற்கு சென்று சேர்ந்து தேக்கமடைவதைத்தான் ஃபேட்டி லீவர் என்பார்கள். இதன் காரணமாக கல்லீரலின் செயல்பாடு இயல்பான அளவை விட குறைவாக இருக்கிறது. இதனால் செரிமானத்திறனும் பாதிக்கப்படுகிறது. அதே போல் செரிமானத்திற்கு பேருதவிப் புரியும் கணையத்திலும், அதன் செயல்பாடான இன்சுலின் சுரப்பிலும் பாதிப்புகள் ஏற்படலாம். இந்த கணையம் மது அருந்துவதால் அதிகளவிற்கு பாதிப்பிற்குள்ளாகிறது. அதேபோல் செரிமானத்திற்கு பித்தப்பையும் தன்னாலான பங்களிப்பை அளிக்கிறது. இதன் இயல்பும் கெட்டு போவதால் செரிமானத்தில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் கல்லீரல், குடல், கணையம், பித்தப்பை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட செரிமானத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் ஜீரணத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் இந்த நான்கு உறுப்புகளிலும் மருத் துவர்கள் பரிசோதனை நடத்துமாறு அறிவுறுத் துவார்கள்.
உடற்பருமனுக்காக மேற்கொள்ளப்படும் பேரியாட்ரிக் சத்திர சிகிச்சையால் ஏதேனும் பின்விளைவுகள் இருக்கிறதா?
உடல் எடையை குறைப்பதற்காக மருத்துவர்கள் வயிற்றின் கொள்ளளவை குறைப்பதற்காக பேரியாட்ரிக் சர்ஜேரி என்ற ஒரு சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
இதனால் பலன் உண்டு. பின்விளைவுகள் மிகவும் குறைவு. இவ்வித சிகிச்சையை அனைவருக்கும் பொதுவானதாக கருதமுடியாது. ஒவ்வொருவ ருக்கும் அவரின் உயரம் மற்றும் உடல் எடையை வைத்து இதை தீர்மானிக்க முடிகிறது. உணவு பழக்க வழக்கங்களால் உடல் எடையை மாற்றியமைக்க முடியவில்லை என்றாலோ அல்லது அவர்களின் உடல் எடை மருத்துவ பரிந்துரைக்கு அப்பால் அதாவது 40 கிலோவிற்கு மேலிருந்தால் மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அத்து டன் இன்சுவைஸ்ட் புரோட்டோகாலின் அடிப்படையில் தான் இதனை பரிந்துரைக்க முடியும்.
பைல்ஸ் எனப்படும் மூலம் தோன்றுவதற்கும் உணவு பழக்கத்திற்கும் தொடர்புண்டா?
நிச்சயமாக. பைல்ஸ் வருவதற்கு நாம் அதிகளவில் மைதா மாவால் செய்யப்படும் உணவு பொருளை சாப்பிடுவதே காரணமாகும். உதாரணமாக பரோட்டாவை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூல நோயின் பாதிப்பு ஏற்படும்.மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அதனை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதன் காரண மாகவும் மூல நோய் பாதிக்கும்.இயற்கை உணவு தவிர்த்த வேறு வகையான உணவுவகைகள் கூட மலச்சிக்கலுக்கு காரணமாகின்றன. மூலத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு மலத்துவாரத்தின் வழியாக இரத்த கசிவுடன் மலம் வெளியேறினால் அதனை உடனடியாக கண்காணித்து அருகிலுள்ள மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைப் பெற வேண்டும். ஏனெனில் இத்தகையோருக்கு சத்திர சிகிச்சை அவசிய மாகலாம்.
பெண்கள் பித்தப்பை கற்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான தீர்வு என்ன?
75 சதவீதத்திற்கும் மேலான பெண்கள் பித்தப்பை கற்களால் பாதிக்கப்படுகிறார்கள். பித்தப்பையில் உள்ள கற்களை நவீன கருவிகளைக் கொண்டு லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றுகிறோம். ஒரு சிலருக்கு பித்தப்பையையும் அவர்களின் உடல் நலம் கருதி அகற்றுகிறோம்.
எண்டாஸ்கோப்பி மூலம் அல்ட்ரா சவுண்ட் மற்றும் ஸ்கேன் வசதிகள் பொருத்தப்பட்டுஅங்கிருக்கும் கற்கள் அகற்றப் படுகின்றன. ஹோர்மோன் பிரச்சினை, இரத் தத்தில் உள்ள கொழுப்புகள் என இரண்டு கார ணங்களை கூறலாம். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்: 0091 8489411000.
தொகுப்பு: அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM