கொரோனாவை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்தாக தெரியவில்லை - ரணில்

Published By: J.G.Stephan

20 Mar, 2020 | 08:13 PM
image

(ஆர்.யசி)

கொரோனா வைரஸ் நாடு பூராகவும் பரவும் அச்சுறுத்தல் நிலை உருவாகியுள்ளது. எனினும் இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரியவில்லை என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் இங்கு மேலும் கூறியுள்ளதாவது,  

இந்த நெருக்கடியை கையாளுவதற்கான நிதி செயற்பாடுகளில் கூட அரசாங்கம் தடுமாற்றங்களை சந்தித்து வருகின்றது. எனினும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான நிதியை கையாளும் வகையில் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை நிறைவேற்றியுள்ளதால் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நிதி விவகாரங்களை கையாள்வதில் எந்த நெருக்கடியும் வரப்போவதில்லை.

அதேபோல் அரசியல் அமைப்பின் 155(3) பிரகாரம் ஜனாதிபதிக்கு இந்த கால எல்லைக்குள் இடைக்கால கணக்கறிக்கைக்கு அப்பால் எந்தவொரு நிதி செலவீனங்களையும் முன்னெடுக்க முடியாது. 

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியின் பின்னர் அடுத்த பாராளுமன்ற அமர்வுகள் கூடும் வரையில் எந்தவொரு நிதி செலவீனங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க முடியாது.

 கட்சி தலைவர் கூட்டம் ஒன்றினை கூட்டுமாறு நாம் கூறியதும் இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டிருந்த காரணத்தினால்தான். நாம் அவ்வாறான கோரிக்கையை முன்வைத்து ஒரு வார காலம் கடந்துள்ள போதிலும் கூட இன்னமும் அரசாங்கத்தின் சார்பில் எந்தவித ஆரோக்கியமான பதிலும் கிடைக்கவில்லை. 

இவ்வாறான சூழ்நிலையில் அரசியல் இலாபம் தேடுவதை கருத்தில் கொள்ளாது நாட்டினை பாதுகாக்கும் நோக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதே முக்கியமானது என்பதை பொறுப்பானவர்களுக்கு கூறுகின்றேன் என அவ கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47