(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மக்கள் நடமாட்டத்தையும் ஒன்று கூடலையும் மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இன்று செவ்வாய்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீதிமன்ற, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை ஒன்றுகூடிய நீதிச் சேவைகள் ஆணைக்குழு இன்று (17) முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்படவுள்ள நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து சுற்று நிரூபமொன்றை நீதிபதிகளுக்கு அனுப்பிவைத்துள்ளது. அதற்கமைய குறித்த தினங்களில் சிவில் வழக்குகள் அனைத்தும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
அவ்வழக்குகள் தொடர்பில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வருகைதந்து பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும். அத்தியாவசிய மற்றும் அவசர முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழக்குகள் மட்டும் அந்தந்த நீதிபதிகளின் தற்றுணிபின் பிரகாரம் அழைக்குமாறு சுற்றுநிரூபத்தின் மூலம் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மற்றும் நீதிவான் நீதிமன்றங்களுக்கும் இது ஏற்புடையதாகும் என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை வளாகத்திலும் பொதுமக்கள் நடமாட்டம் இதன் கீழ் மட்டுப்படுத்தப்படும். வங்கி கொடுக்கல் வாங்கல்கள், வர்த்தக மற்றும் வாணிப நடவடிக்கைகளை வழமையான ஒழுங்கில் பேணுவதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய கொரோனா ஒழிப்பு செயலணியின் பணிகள் ராஜகிரிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர மாவத்தை 1090 என்ற இலக்கத்தில் உள்ள நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும்.
மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பேணுவதற்கு அரசாங்கம் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. உருவாகியுள்ள நிலைமையை சரியாக புரிந்துகொண்டு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM