ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் அறிமுகத்தின் பின்பு நின்னா செல்பி, நடந்தா செல்பி, சாப்பிட்டா செல்பி என ஒரே செல்பி மயமாகியுள்ளது.
மிக அபாயமான இடங்களில் செல்பி எடுக்கும் ஆர்வமும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதால் பலர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.
செல்பி மோகம் எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை. அடிக்கடி செல்பி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் விழுந்து சீக்கிரமே முதியவர் தோற்றத்தை ஏற்படுத்தி விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கையடக்கத்தொலைபேசியில் இருந்து வெளிப்படும் ஒளியானது சருமத்தில் உள்ள நுண்துளைகள் வழியாக அடிப்பகுதிக்குள் ஊடுருவுவதால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தி மெலனின் பிக்மென்ட் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
இதனால் முகத்தில் உள்ள செல்கள் பழுதடைந்து கரும்புள்ளிகளையும் கருந்திட்டுகளையும் ஏற்படுத்துவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.
கையடக்கத்தொலைபேசியில் இருந்து வெளிப்படும் மின்காந்த கதிர்வீச்சு, தோலில் உள்ள மரபணுக்களை (DNA) அழித்து விடுவதால் தோல் விரைவில் வயதான தோற்றம் பெற்றுவிடுமென சர்வதேச இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கையடக்கத்தொலைபேசியில் இருந்து வெளிப்படும் LED ஒளி, ஒக்சிஜன் எதிர்வினை புரிவதால் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதோடு, சருமப் புற்றுநோய் வருவதற்கான அபாயங்களும் உண்டாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM