கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது பிரிட்டனில் அதிகரித்து வருவதானல் இரண்டாம் எலிசபெத் மகாராணி பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளார்.
கொரோனா தொடர்பான பிரிட்டன் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மாகாராணியின் உடல் நலனை கருத்திற் கொண்டே 93 வயதான இரண்டாம் எலிசபெத் மகாராணியும், 98 வயதான அவரது கணவர் இளவரசர் பலிப்பும் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளனர்.
அண்மைக் காலத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணி பக்கிங்ஹாம் அரண்மனையில் அநேகமானோரை சந்தித்துள்ளார்.
சிறந்த உடல் நலத்துடன் இருக்கும் மகாராணியின் 94 ஆவது பிறந்த நாள் இன்னும் சில வாரங்கள் உள்ளது.
இந் நிலையில் அவர் தொடர்ந்தும் அரண்மனையில் இருந்தால் அவரை காண வரும் ஏனையோரால் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படக் கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ள மகாராணியும் இளவரசர் பலிப்பும் வின்ட்சர் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பக்கிங்ஹாம் அரண்மனை உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்கள் உட்பட பார்வையாளர்கள் தொடர்ச்சியாக சென்று வரும் தளம் ஆகும்.
தற்போது பிரிட்டனில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 1,140 ஆக உள்ளது. எனினும் உண்மையான எண்ணிக்கை 10,000 க்கு மேலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அத்துடன் அங்கு கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 21 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM