"தவறான தகவல்களால் மக்கள் பீதியடையத் தேவையில்லை" :கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க அரசின் நடவடிக்கைகள் தீவிரம்

Published By: J.G.Stephan

15 Mar, 2020 | 01:20 PM
image

இலங்கையில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிலையில், சமூக இணையத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியாகும் தவறான தகவல்களில் மக்கள் கவனம் செலுத்தி அதன் மூலம் அச்சம் அடையக்கூடாது என்பதற்காகவே அரசாங்க தகவல் திணைக்களம் இந்த வைரஸ் தொற்று தொடர்பாக சரியான தகவல்களை உறுதி செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.

கொரொனா வைரஸ் தொற்று தொடர்பாக பொது மக்களுக்கு விரிவான வகையில் தகவல்களை வழங்குவதற்காக அனைத்து இலத்திரயனில் ஊடகங்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு இன்று இடம்பெற்றது.

இன்று(15.03.2020) காலை 10.00 மணி ஆரம்பமான இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கொரோனா வைரஸ் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் சமூக ஊடகங்கள் சில பொறுப்பற்ற வகையில் செயற்படுவது கவலைக்குரியதாகும். உண்மையான விடயங்களை உறுதி செய்து பொது மக்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சு உள்ளிட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி கொவிட் - 19 என்ற ஊடக மத்தியநிலையத்தை நாம் எற்பாடு செய்துள்ளோம்.

இதன் ஊடாகவே உறுதி செய்யப்பட்ட தகவல்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது. வைரஸ் தொடர்பில் நாடு எதிர்கொண்டுள்ள சவாலுக்கு மத்தியில் அனைவருக்கும் இதில் பொறுப்புண்டு. இவ்வேலைத்திட்டங்களை சீர்குலைக்க இடமளிக்கக்கூடாது. சர்வதேச ரீதியில் இன்று வளமிக்க நாடுகள் கூட பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து இதில் இருந்து மக்களை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்பதை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கருத்துரைக்கையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக 10 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 1,719 பேர் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களுள் 14 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இராணுவ வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இராணுவத்தினர் சிவில் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் தற்பொழுது செயற்பட்டு வருகின்றனர். இவர்களது தேசிய பாதுகாப்பு பணி என்பது இராணுவ காலத்தில் மாத்திரம் அல்ல, நாடு அனர்த்தத்தை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் உரிய கடமைகளை நிறைவேற்றுவதே ஆகும்.

இப்பொறுப்புக்களை இராணுவம் முன்நின்று செயற்படுத்தி வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53