கொரோனா வைரசினால் சிறுவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
ஏஎவ்பி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதற்கான காரணங்கள் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள் வைரஸ் தாக்கத்திற்குள்ளான சிறுவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் மூலம் நோய்பரவாது என்பது அர்த்தமில்லை எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவர்கள் வைரசினால் பாதிக்கப்படுவது எங்களிற்கு தெரியும்,ஆனால் அவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை மரணிக்கவில்லை என ஜோன்கொப்கின்ஸ் புளும்பேர்க் பொது சுகாதார கல்லூரியின் தொற்று நோயியலாளர் ஜஸ்டின் லெஸ்லெர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்வாறு அறிகுறிகளற்ற அல்லது சிறிதளவு அறிகுறிகளை கொண்டுள்ள சிறுவர்கள் எவ்வளவு தூரம் நோயை பரப்புகின்றனர் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வுகானை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போது 10 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களில் ஒரு வீதமானவர்களே நோய் தொற்றிற்கு ஆளாகியிருந்ததும் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
பத்து வயதிற்கு உட்பட்டவர்கள் மத்தியில் நோய் தொற்று மிகவும் குறைந்தளவே காணப்பட்டமையும் இறப்புகள் இல்லாததும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
20 வயதிற்கு உட்பட்டவர்கள் மத்தியில் பாதிப்பு குறைவாக உள்ளமைக்கான காரணம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம் என அமெரிக்காவின் சுகாதார பொகட்ரி சர்வதேச ஆய்வு மையத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM