நாட்டில் நல்லாட்சியை முன்னெடுக்க ரணிலும் சஜித்தும் ஒன்றுபட வேண்டும் - ரிசாத்

Published By: Daya

14 Mar, 2020 | 03:13 PM
image

நாட்டிற்கு நல்லாட்சியை வழங்க ரணிலும் சஜித்தும் ஒன்றுபட அழைப்பு விடுக்கின்றோம் என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுர்தீன் தெரிவித்தார். 

வவுனியா அருந்ததி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் கூடி முடிவெடுத்ததன் பிரகாரம் அனைத்து இனத்தவரையும் பிரதிபலிக்கின்ற பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய மக்கள் முன்னணி என்ற பெரும் சக்தியாக இந்த தேர்தலில் போட்டியிட இருக்கின்றோம்.

இன மத பிரிவினை அற்ற அனைவரும் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்துவது எமது எதிர்பார்ப்பாகும். அந்தவகையில் ஐக்கியதேசியக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நிற்பதென்பது அவர்களது கட்சி ஆதரவாளர்களுக்குச் செய்யும் அநியாயமாகும். 

எனவே இந்நிலையில் இருசாராரும் ஒன்றுபட்டு ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் சஜித் பிரேமதாசா தலைமையிலான கூட்டமைப்பிலே கலந்து கொள்வதுதான் சாலச்சிறந்ததாக இருக்கும். அதனூடாகத்தான் அதிக ஆசனங்களைப் பெறமுடியும். 

அதனூடாகவே ஆட்சி அமைக்க முடியும். எனவே அவ்வாறு நல்ல சூழல் இருக்கின்ற போது அதனை விடுத்துப் பிரிந்துநின்று கேட்டு வாக்கைச் சிதறடிப்பதானது அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கும் நாட்டிற்கும் செய்யும் அநியாயமாகும்.

ஆகவே இந்நிலையில் நாட்டிற்கு நல்லாட்சியைத் தரக்கூடிய வகையில் ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய நிலையை உருவாக்குவதற்காக நாம் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் அதன் தலைவரான ரணிலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்திற்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

இதேவேளை கொரொனோ வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம் முற்றாகச் செயலிழந்து நிற்கின்றது. அந்தவகையில் எமது நாட்டிலும் அதன் தாக்கம் பெரியளவில் தாக்கம் செலுத்தி வருகின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தினை கூட்ட வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதேவேளை அனைத்துக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துக்கட்சியையும் உடனடியாக கூட்டி இந்த பிரச்சினையைக் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமையாக இருந்து எவ்வாறு முகம்கொடுக்கலாம் எவ்வாறு நாட்டு மக்களைக் காப்பாற்றலாம் மற்றும் பொருளாதார அழிவிலிருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம் என்பது தொடர்பாகக் கலந்துரையாட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07