தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ஒருவர் பலி : 8 பேர் காயம்

Published By: R. Kalaichelvan

14 Mar, 2020 | 12:42 PM
image

(செ.தேன்மொழி)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி - வேனுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த வேன் மீது அதே திசையில் பின்னால் வந்த லொறி மோதியுள்ளது. 

இதன்போது குறித்த வேனில் சாரதி உட்பட 9 பேர் பயணித்துள்ளதுடன் , விபத்தில் படுகாயமடைந்த நபர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இதனை தொடர்ந்து கஹதுட்டுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்திருந்த ஏனைய எட்டுப் பேரும் தொடர்ந்தும் சிகிச்சைப்  பெற்றுவருகின்றனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13