பேஸ்புக் காதலனை தேடி இலங்கையில் இருந்து விமானத்தில் இந்தியாவிற்கு சென்ற இளம்பெண் ஒருவர் காதலனின் வீட்டில் இருந்து இந்திய பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தற்போது டுபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவியும் மகளும் இரத்தினபுரியில் வசித்து வந்தனர். தாயின் பராமரிப்பில் இருந்த இளம்பெண் பேஸ்புகில் மூழ்கியதால் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்துள்ளார்.
அப்போது, இந்தியாவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த இளைஞருடன் குறித்த இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரின் மயக்கும் வார்த்தையில் இதயத்தை பறிகொடுத்த இளம்பெண் அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.
அடுத்த சில நாட்களிலேயே இருவரும் தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் மணிக்கணக்கில் பேசத் தொடங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு காதலனை சந்திக்கும் ஆவலில் இளம்பெண் சென்னைக்கு விமானம் ஏறி சென்றுள்ளார். பின்னர் இருவரும் சென்னையில் இருந்து காதலனினன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
தனது “மகளின் கடல் கடந்த காதல் விவகாரம் தெரிந்து அதிர்ந்து போன இளம்பெண்ணின் தந்தை டுபாயில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார் .
பின் தனது காதலனுடன் பண்ருட்டி பகுதியில் தங்கி இருப்பதை அறிந்து அவர், கடலூர் மாவட்ட பொலிஸாரின் உதவியை கோரியுள்ளார்.
கடந்த மாத் 26 ஆம் திகதி சுற்றுலா விசாவில் வந்த தனது மகளை காதல் ஆசை காட்டி பண்ருட்டி வாலிபர் வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து இந்த வாலிபரின் தொலைபேசி எண்ணை வைத்து சென்னையில் தனியாக வீடொன்றில் காதலனுடன் தங்கி இருந்த இளம்பெண்ணை பொலிஸார் மீட்டுள்ளனர்.
எனவே தந்தையுடன் அந்த பெண்ணை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதா ? அல்லது காதலனுடன் இந்தியாவிலேயே தங்க அனுமதி அளிப்பதா என்பதற்கு விடை தெரியாமல் பொலிஸார் குழம்பி உள்ளனர்.
ஆனாலும் தனது மகளை இலங்கைக்கு அழைத்து வந்து விடவேண்டும் என்பதில் தந்தை உறுதியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM