திருவிழாக்கு சென்று வீட்டுக்கு வந்த  குடும்ப பெண் தீப்பிடித்து உயிரிழப்பு

19 Jun, 2016 | 05:01 PM
image

மட்டக்களப்பு, வாழழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்று வீட்டுக்கு வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் மீது  தீப் பிடித்துக் கொண்டதினால் அவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனை தேவாபுரம் பகுதியைச் சேர்ந்த பிள்ளை ஒன்றின் தாயான சீனித்தம்பி சுவாஜினி(32 வயது) என்றழைக்கப்படும்  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரின் கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது 13 வயது மகளுடன் வாழைச்சேனையில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்த கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்றுள்ளார்.

திருவிழா முடிவடைந்து நேற்று மாலை 4 மணியளவில் வீட்டுக்கு வந்து தேனீர் தயார் செய்வதற்காக கேஸ் சிலிண்டர் அடுப்பை தயார் நிலை படுத்தும்போது கேஸ் சிலிண்டரில் ஏற்பட்டிருந்த கசிவுத் தன்மை காரணமாக இவர் மீது தீப் பிடித்துள்ளது.

உடனடியாக தீக் காயங்களுக்குள்ளான இவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்ற வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் இவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை  பொலிஸார் மேற்கொள்ள பிரேத பரிசோதணையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஜெயக்கொடி மேற்கொண்டு மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தார்.

இம் மரணம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஷீர் மேற்கொண்டு தீயினால் ஏற்பட்ட விபத்து மரணம் எனத் தீர்ப்பளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46