கொரோனா தொற்றுக்குள்ளான நாடுகளிலிருந்து இன்றும் வருகை தந்த பெருமளவானோர்

Published By: Vishnu

11 Mar, 2020 | 08:35 PM
image

(எம்.மனோசித்ரா)

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலிருந்து இன்றைய தினமும் பெருமளவானோர் இலங்கைக்கு வந்துள்ளனர். 

இவ்வாறு வருகை தந்த அனைவரும் பூணானி மற்றும் கந்தக்காடு மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார். 

வெளிநாடுகளிலிருந்து வழமையாக வருவதைப் போன்று பிரயாணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் முறையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நாட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஊடகங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற செய்திகளால் மக்கள் வீண் அச்சமடைகின்றனர். 

எனவே நாட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை தவிர்த்து மக்கள் அச்சமடையாதவாறு விழிப்புணர்வூட்டும் வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். 

வெளிநாட்டிலிருந்து வரும் பிரஜைகளை பாதுகாப்பான முறையில் மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை முப்படை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59