கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலைப் பயன்படுத்தி கணினிகளுக்கு வைரஸ் தாக்குதல் நடத்தப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்த அறிவுரைகள் இ-மெயில், இணையதளம், சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப் பட்டு வருகின்றன.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலைப் பயன்படுத்தி பிரபல நிறுவனங்களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த கணினி வைரஸ் தாக்குதலால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன.
இதுகுறித்து சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'செக் பொயின்ட்' (Checkpoint) மூத்த அதிகாரிகள் கூறும்போது, “ கொவிட் ” (covid) , “ கொரோனா ” (corona) தலைப்புகளில் உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கணினி வைரஸ் கொண்ட இ-மெயில்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் மட்டும் பெரிய நிறுவனங்களை குறிவைத்து சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கணினி வைரஸ் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் பல நிறுவனங் களின் முக்கிய தகவல்கள் திருடப் பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் கேட்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. எனவே கொவிட் , கொரோனா பெயர்களில் வரும் போலி இ-மெயில்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்" என்று தெரிவித்தனர்.
உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலைப் பயன்படுத்தி உலக சுகாதார ஸ்தாபனத்தின் பெயரில் பலருக்கு போலி இ-மெயில்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. இதுபோன்ற போலி இ-மெயில்கள், இணைய தளங்கள், தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், பேக்ஸ் தகவல்களை நம்ப வேண்டாம்.
நாங்கள் யாரிடமும் கடவுச்சொல் (Password) உள்ளிட்ட எந்த விவரங்களையும் கேட்பது கிடையாது. ஏதாவது விவரம் தேவை என்றால் https://www.who.int என்ற எங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
மோசடி குறித்து பொதுமக்கள், நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போலி இமெயில்கள் குறித்து எங்களது இணையதளம் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். இவ்வாறுஉலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM