பாடசாலை முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியரின் தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றை பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் நாவற்குழி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்து வருகின்றார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழமை போன்று பாடசாலை முடித்து , திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் ஆசிரியரை வழிமறித்து தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றை அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை நல்லூர் - செம்மணி வீதியில் மதியம் மற்றும் இரவு நேரங்களில் வீதியில் ஆள்நடமாட்டம் குறைவாக காணப்படும் வேளைகளில் வீதியில் பயணிப்போரிடம் அப்பகுதியில் நடமாடும் வழிப்பறி கொள்ளையர்கள் , வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் பலரும் பொலிசாருக்கு அறிவித்த நிலையிலும் , பொலிசாரால் வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய முடியவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM