ரோஹித அபேகுணவர்தனவின் 23 வருட அரசியல் பணியை பாராட்டும் நிகழ்வில் ஜனாதிபதி 

Published By: Digital Desk 4

08 Mar, 2020 | 06:32 PM
image

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் 23 வருட அரசியல் சேவையை பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்வு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (08) முற்பகல் களுத்துறையில் இடம்பெற்றது.

ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் பயணம் தொடர்பாக எழுதப்பட்ட நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

கப்பல் தலைவன் ஒருவரின் திறமையை அமைதியான கடலிலன்றி, பெரும் புயலின்போதே கண்டுகொள்ள முடியும். அந்த வகையில் ரோஹித அபேகுணவர்தனவும் கடந்த சில வருடங்களாக எதிர்க் கட்சியிலிருந்து தனது பணியை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சில அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தனது தலைமைத்துவ திறனை எடுத்துக்காட்டிய ஒருவர் என நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பெபிலியான சுனேத்ரா தேவி மகா பிரிவெனாவின் பிரிவெனாதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் அனுசாசன உரை நிகழ்த்தினார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் நிகழ்வில் உரையாற்றினார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34