"நாட்டை இரா­ணுவ ஆட்­சிக்குள் தள்ள முயற்­சிக்­கின்­ற­வர்­களை நம்­ப­வேண்டாம்": சரத் பொன்­சேகா

Published By: J.G.Stephan

07 Mar, 2020 | 12:04 PM
image

(ஆர்.யசி)

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை மறந்­து­விட்டார். இப்­போது பொதுத் தேர்­தலில் ஆட்­சியை கைப்­பற்ற புதிய வாக்­கு­று­திகளை கொடுக்­கின்றார். ஆனால் இவை அனைத்­துமே பொய்­யா­னவை என்­பதை மக்கள் உணர வேண்டும் என்று  ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா  தெரி­வித்தார்.

 

பொதுத் தேர்­த­லுக்­கான ஆயத்­தங்­களில் ஐக்­கிய தேசியக் கட்சி ஈடு­பட்டு வரு­கின்ற நிலையில் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் மற்றும் அர­சியல் நகர்­வுகள் குறித்து வின­விய போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில், 

ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் வெகுவிரைவில் தீர்க்­கப்­படும். அதில் மக்கள் சந்­தேகம் கொள்­ளத்­தே­வை­யில்லை. இப்­போது கருத்து முரண்­பா­டுகள் இருக்­கின்­றன என்­ப­தற்­காக கட்சி பிளவுபடும் என்ற எண்­ணப்­பாடு கொள்­ளத்­ தே­வை­யில்லை. ஜன­நா­யக கொள்கை உள்ள கட்­சி­யாக நாம் சக­ல­ரது கருத்­து­க­ளுக்கும் செவிமடுக்­கின்றோம். 

இம்­முறை தேர்­தலில் கூட்­ட­ணி­யாக பல கட்­சி­களை இணைத்­துக்­கொண்டு கள­மி­றங்­குவோம். அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்­கத்தில் மக்­களின் வாக்­கு­களை கேட்டு நிற்­கின்றோம். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவும் அவ­ரது அணி­யி­னரும் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­திகள் என்ன என்­பதை இன்று  மறந்­துள்­ளனர். 

ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜபக் ஷ மக்க­ளுக்கு கூறிய விட­யங்கள் இன்று கைவிடப்­பட்­டுள்­ளன. கொடுத்த வாக்­கு­று­திகள் மீறப்­பட்­டுள்­ளன. விலை குறைப்பு, சம்­பள கொடுப்­ப­ன­வுகள், வேலை­வாய்ப்­புகள், அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும், கடன்கள் அடைக்­கப்­படும் என கூறினார். ஆனால் இவற்றில் ஒன்­றேனும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இந்த ஆட்­சியின் போதும் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே மக்கள் இவர்­களை நம்­பு­வதில் எந்தப் பயனும் இல்லை. நாம் கடந்த ஐந்து ஆண்­டு­களில் நாட்­டுக்­கான கடனை அடைத்­துள்ளோம். பாரிய சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுத்தும் நாட்­டினை கடன் நெருக்­க­டிக்குள் தள்ளும் சூழலை உரு­வாக்­க­வில்லை. ஆனால் இன்று அவ்­வாறல்ல, மிகக் குறு­கிய காலத்தில் அர­சாங்கம் வேலைத்­திட்டம் ஒன்று இல்­லாமல்  தடுமா­றிக் ­கொண்­டி­ருக்­கின்­றது. 

எனவே, இம்­முறை பொதுத் தேர்­தலில் மக்கள் சரி­யான தீர்­மானம் எடுக்க வேண்டும். இந்த நாட்­டினை இரா­ணுவ ஆட்­சிக்குள் தள்ள முயற்­சிக்கும் தலை­வர்­களை நம்பி ஏமா­றாது ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்தும் அணியின் பக்கம் மக்கள் கைகோர்க்க வேண்டும். நாம் சகல இன மத மக்­களின் கட்­சி­க­ளையும் உள்ளடக்கி சகல மக்களையும் பாதுகாக்கும் ஆட்சியை உருவாக்க முயற்சிக்கின்றோம். மாறாக ராஜபக் ஷவினரின் தனி சிங்கள பெளத்த கொள்கை என கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களை அடக்குமுறைக்குள் தள்ளும் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் செய்யவில்லை  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21