காசாவில் உள்ள பேக்கரியொன்றில் நேற்யை தினம் ஏற்பட்ட தீ விபத்தினால் குறைந்தது 09 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த ஒன்பது பேரில் ஆறு சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளதுடன் காயமடைந்தவர்களில் 14 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பாலஸ்தீன் சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.
காசாவின் நுசோராட் என்ற முகாமில் அமைந்துள்ள பேக்கரியொன்றிலேயே இந்த தீ விபத்தானது இடம்பெற்றுள்ளதுடன், அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் தொழிற்சாலைகள் மற்றும் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீயானது விரவைாக பரவியுள்ளது.
ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள காசாவின் இந்த பேக்கரியில் எரிவாயு கசிவின் காரணமாகவே பல சமயல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காசாவின் உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன் பின்னர் பொது மக்கள் மற்றும் தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீப் பரவலானது சுமார் 3 மணி நேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த அனர்த்ததினால் 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 60 பேர் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Photo Credit : Aljazeera
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM