கினிகத்தேனை ஹொரகட பிட்டவல வீதியில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (05) முற்பகல் 2.00 மணி அளவில் ஹொரகட சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் ஹொரகட பிட்டவல பகுதியை சேர்ந்த 19 வயதான அனுச தில்சான் என்ற இளைஞனே இவ்விபத்தில் பலியானதாகவும் இவரது சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
கினிகத்தேனை பகுதியிலிருந்து ஹொரகட வழியாக பிட்டவல நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஹொரகட வழியாக கினிகத்தேனையை நோக்கி சென்ற லொறியுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதையடுத்து குறித்த மோட்டார் சைக்கிள் வளைவு பகுதியில் வழுக்கிச் சென்றதால் இளைஞனுக்கு வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது.இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM