வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினால் அரச நியமனம் கிடைக்கப்பெற்று இடை நிறுத்தம் செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் அரச நியமனம் கிடைக்கப்பெறாத பட்டதாரிகளுக்கான தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த கலந்துரையாடல் திர்வரும் 09.03.2020 திங்கட்கிழமை காலை 11மணியளவில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
வடமாகாண பட்டதாரிகளின் அரச நியமனங்களில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு பெற்றுக்கொள்ளும் நோக்கில் அண்மையில் அரச நியமனம் கிடைக்கப்பெற்று இடை நிறுத்தம் செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் தவறாது கலந்துகொள்ளுமாறு வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ம.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் 0777425286, செயலாளர் 0773301064, பொருளாளர் 0770763688 ஆகிய இலங்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM