இனம் , மதம் மற்றும் மொழி அல்லது வாழும் பிரதேசத்தை கவனிக்காது சமுதாயத்தில் அனைவருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமாயின் எவ்வித பேதங்களும் நாட்டில் ஏற்படாது. முன்வைத்துள்ள மக்கள் மயப்பட்ட பொருளாதார மாதிரியில் இவ்விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்துறை சார்ந்தவர்களுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலன்களை மக்கள் அனைவருக்கும் விசேடமாக வறிய மக்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அவர்களை வறிய நிலையிலிருந்து மீட்டெடுத்து ,பொருளாதாரத்தின் சிறப்பான பங்காளர்களாக மாற்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை துரிதமாகவும் சிறப்பானதாகவும் முன்னேற்ற வேண்டும்.
நவீன டிஜிட்டல் யுகத்தின் தேவைக்கேற்ப உயர் தரத்திலான திறமை வாய்ந்தவர்களை உருவாக்கி இலகுவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு பொருளாதாரத்தை மிஞ்சிய விரிவுபடுத்தப்பட்ட தொழில்வாய்ப்புகளுக்கு அவசியமான திறன் அபிவிருத்தியை மக்களுக்கு சென்றடைய செய்யும் சவாலை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.
பாடசாலைஇ பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து உருவாகும் தொழிற்படையினருக்கும் தொழிற்சந்தையின் கேள்விக்கும் இடையில் பாரியதொரு இடைவெளி காணப்படுகின்றது.
இன்று தகவல் தொழிநுட்பத்துறை முகங்கொடுத்துள்ள பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறையை அது எடுத்துக்காட்டுகின்றது. அதனால் கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
தேவையற்ற கட்டுப்பாடுகளை இலகுபடுத்தி அல்லது நீக்கி தடைகளற்ற பொருளாதார செயற்பாட்டிற்கு வாய்ப்பளிக்கக்கூடிய சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய பணியெனவும் இந்த இலக்கை நோக்கி செல்வதற்கு நவீன தொழிநுட்பத்தை பொருளாதாரத்துடன் இணைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM