பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்மட்டக் குழு விரைவில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அதன் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மலையக மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் சம்பந்தமான விபரத்தைக் அறிவிக்குமாறு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் கடந்த தேர்தலில் நானும் திலகராஜாவும் போட்டியிட்டோம். மலையக மக்கள் முன்னணி சார்பில் இராதாகிருஸ்ணன் போட்டியிட்டார். நாங்கள் மூவருமே வெற்றி பெற்றிருந்தோம். அதைப்போலவே இம்முறையும் மூன்று வேட்பாளர்களை களமிறக்கத் தீர்மானித்துள்ளோம்.
இம்முறை எமது சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எம். உதயகுமார் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவரின் வேண்டுகோள் நியாயமானதாகவும் அமைந்துள்ளது. அதேநேரம், தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜாவும் மீண்டும் பாராளுமன்றத்துக்குத் தெரிவாக வேண்டும். அவர் கடந்த காலங்களில் எமது மக்கள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் குரல்கொடுத்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேசியப் பட்டியல் உறுப்பினரைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. எனவே, நான் தேசியப் பட்டியலில் இடம்பெற்று ஏனைய இரண்டு பேரையும் போட்டியிட வைப்பதா அல்லது திலகராஜ் மற்றும் உதயா ஆகிய இருவரில் ஒருவரை தேசியப் பட்டியலுக்கு உள்வாங்கிக் கொண்டு மற்ற இருவரையும் போட்டியிட வைப்பதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
இது சம்பந்தமாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்மட்டக் குழு விரைவில் கூடி கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்க்கமான முடிவை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய இறுதி முடிவு மேற்கொள்ளப்படும்.
அநேகமாக அடுத்த வாரமளவில் எமது உயர்மட்டக் குழுவின் கூட்டத்தை கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் வேட்பாளர் தெரிவு உட்பட தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அதற்கான குழு அமைத்தல் உட்பட இன்னும் பல முக்கிய விடயங்கள் பற்றி பேசவுள்ளோம். இறுதி முடிவு எட்டப்பட்டவுடன் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். எனவே, அதுவரை யூகங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டு குழப்பகரமான நிலையை ஏற்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM