மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசலை, மீளவும் உரிய பள்ளிவாசல் நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்குமாறு, அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில்,
பைஸர் முஸ்தபா தலைமையிலான குழுவினர், கடந்த (26) புதன்கிழமையன்று நீதி அமைச்சில் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இக்குழுவில், மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் உட்பட மூன்று பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, பைஸர் முஸ்தபா குழுவினர், நூறு வருடங்களுக்கும் மேலாக பழைமை பொருந்திய குறித்த பள்ளிவாசல், சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ளதுடன், அங்கு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டு, சமய வழிபாடுகள் இடம்பெறுவதாகவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். அத்துடன், முஸ்லிம்களின் சமய வழிபாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பள்ளிவாசலை மீளவும் சிறைச்சாலை நிர்வாகத்திடமிருந்து விடுவித்துத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
1967 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த இப்பள்ளிவாசல் மூடப்பட்டிருக்கவில்லை. 2019 ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இப்பள்ளிவாசலைப் பயன்படுதுவதை சிறைச்சாலை நிர்வாகம் அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தி மறுத்திருந்தது. அவசரகாலம் முடிந்ததும் இப்பள்ளிவாசல் நிர்வாக சபையிடம் ஒப்படைக்கப்படவில்லை. காலாகாலம் மூடியிருந்ததாகக் கூறி பொய்க் காரணங்களைக் காட்டி, சிறைச்சாலை அதிகாரிகள் இதனை ஓய்வு அறையாக மாற்றியுள்ளமை, சட்டத்திற்கு முரணானதாகும்.
இதனால், இப்பகுதியைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள், தங்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது பல்வேறு அசெளகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளனர் என்றும் இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா நீதியமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனையடுத்து, முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள குறித்த ஜும்ஆப் பள்ளிவாசல் விவகாரத்துக்கு சுமுகமான தீர்வு பெற்றுத் தருவதாக நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பைஸர் முஸ்தபா குழுவினரிடம் உறுதியளித்திருந்த நிலையிலேயே, இப்பள்ளிவாசலை மீளவும் உரிய நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தைப் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவிடமிருந்து இதற்கான உத்தரவு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஊடாக தமக்கு தகவல் தெரியப்படுத்தியிருப்பதாக, சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM