சீயான் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.
‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் தயாராகிவரும் கர்ணன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நட்சத்திர வாரிசு நடிகரான துருவ் விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்குகிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தை துருவ் விக்ரமை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய E4 என்டர்டைன்மென்ட் என்னும் நிறுவனம் தயாரிக்கிறது.
‘ஆதித்ய வர்மா’ படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததைத்தொடர்ந்து அதே நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது, அவரின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லது என்கிறார்கள் திரையுலக அனுபவஸ்தர்கள்.
துருவ்விக்ரமிற்காக இதுவரை விக்ரம் அறுபதிற்கும் மேற்பட்ட கதைகளை கேட்டதாகவும், அதில் மாரி செல்வராஜ் சொன்ன கதை பிடித்துபோனதால், அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் விக்ரமுக்கு நெருக்கமானவர்கள். இதனிடையே துருவ் விக்ரம் தற்போது கல்லூரிகளுக்கு விசேட அதிதியாக பங்குபற்ற அழைத்தால், மறுக்காமல் ஒப்புக்கொண்டு நிகழ்ச்சிக்கு சென்று இளைஞர்களிடம் உரையாற்றுகிறார். இதன் மூலம் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM