சிறு­பான்மை சமூ­கங்­களும் பாரா­ளு­மன்றத்தேர்­தலும்

Published By: J.G.Stephan

04 Mar, 2020 | 03:35 PM
image

நாட்டின் எட்­டா­வது பாரா­ளு­மன்றம் திங்­கட்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் கலைக்­கப்­பட்­டுள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஐந்து வருட ஆயுட்­காலம்  நிறைவு பெற ஒன்­பது மாதங்கள் இருக்கும்போதே, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­பட்டு ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன வேட்­பாளர் கோத்த­பாய ராஜ­பக்ஷ வெற்­றி­யீட்­டி­யதைத் தொடர்ந்து ஜன­நா­ய­கத்­துக்கு மதிப்­ப­ளித்து நல்­லாட்சி அர­சாங்கம் பதவி விலகிக் கொள்ள, மஹிந்த ராஜ­பக் ஷ பிர­த­ம­ராகி அவ­ரது தலை­மையில் அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­பட்­டார்கள். இம்­மாதம் 12 ஆம் திகதி முதல்  19 ஆம் திகதி வரை வேட்பு மனு ஏற்றுக்கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தோடு, ஏப்­பிரல் மாதம் 25 ஆந் திகதி தேர்தல் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இம்­முறை 1 கோடியே 62 இலட்­சத்து   63 ஆயி­ரத்து   889 பேர் வாக்­க­ளிக்­க­வுள்­ளார்கள். மேலும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளித்­த­வர்­களை விட 2 இலட்­சத்து     71 ஆயி­ரத்து 789 பேர் இந்தத் தேர்­தலில் வாக்­க­ளிக்­க­வுள்­ளார்கள். இவர்கள் அனை­வரும் 2019 ஆம் ஆண்டு வாக்­காளர் இடாப்பில் புதி­தாக பதியப்­பட்­டுள்­ள­வர்கள் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

இப்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டுவிட்­டதால் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் “காபந்து” அர­சாங்கம் அமைய, ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனைவரும் “முன்னாள்” உறுப்­பி­னர்கள் என்ற அடை­மொ­ழி­யோடு தேர்­தலில் களம் இறங்கத் தயா­ராக இருக்­கின்­றார்கள். சில­ருக்கு போட்­டி­யிட வாய்ப்பு கிடைக்­கா­மலும் போகலாம். அந்­நேரம், புது­மு­கங்கள் போட்­டி­யிட வாய்ப்பும் கிடைக்­கலாம். அர­சியல் கட்­சிகள் ஏற்­க­னவே ஓர­ளவு வேட்­பாளர் விட­யத்தில் தயா­ராக இருந்­தாலும் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­விப்பை வெளி­யி­டு­வ­தற்கு முன்னர் மாற்­றங்கள் இடம்­பெ­றவும் வாய்ப்பு இருக்­கின்­றது. தேசியக் கட்­சி­க­ளுக்கு இடையில் இருந்து வந்த முரண்­பா­டுகள் ஓர­ளவு நிவர்த்­தி­யாகி இருந்­தாலும் இன்னும் சில முக்­கிய விட­யங்­களில் இழு­பறி நிலை இருந்து கொண்­டுதான் இருக்­கின்­றன.

தமிழ் பேசும் சமூ­கங்­களின் எதிர்­பார்ப்­புகள்
இந்த நாட்டில் காலம் கால­மாக இடம்­பெற்று வரும் தேர்­தல்­களில் தமிழ் பேசும் மக்கள் தமது பங்­க­ளிப்பை வழங்­கு­வதில் முன்­னணியில் இருந்து வரு­கின்­றார்கள். அதன் ஊடாக தாங்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்­பி­னாலும் தற்­கா­லிகத் தீர்வைக்கூட பெற்றுக்கொள்ள முடி­யா­த­வர்­க­ளா­கவே இருக்­கின்­றார்கள்.

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் இன்­னமும் தீர்வை எட்டமுடி­யாமல் இருந்து வரு­கின்­றன. முப்­பது வருட யுத்தம் நிறை­வுக்கு வந்து 12 ஆண்­டுகள் ஆகியும் அந்த மக்­களின் பூர்­வீகக் காணிகள் விடு­விக்கப்படாமல் உள்­ளன. அதற்­கான தொடர் போராட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்றபோதிலும் ஆட்­சிக்கு வரும் அர­சுகள் கண்டு கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை. காணாமல் போன­வர்­களை கண்டுபிடிப்­ப­தற்­காக அலு­வ­லகம் அமைக்­கப்­பட்டும் எதுவும் நடக்­க­வில்லை.

ஐ,நா. மனித உரிமை பேர­வையில் இணை தலை­மையில் இருந்து வந்த இலங்கை இந்த முறை அதி­லி­ருந்து விலகிக் கொண்­டுள்­ளமை தமிழ் மக்­களின் உணர்­வு­க­ளையும், உரி­மை­க­ளையும் உதா­சீனம் செய்­துள்­ள­தா­கவே தமிழ் தரப்­பினர் குற்றம் சுமத்­தி­யுள்­ளார்கள்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் பிர­த­ம­ராக இருந்த ரணில் விக்­கி­­ரம­சிங்க நெருக்­க­டியை எதிர்­கொண்ட நேரத்­திலும், அவரை பத­வி­யி­லி­ருந்து முன்னாள் ஜனா­தி­பதி இறக்­கிய நேரத்­திலும் தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே அவ­ருக்குக் கைகொ­டுத்து காப்­பற்­றி­யுள்­ளார்கள். இருந்தும் தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் உதா­சீனம் செய்­யப்­பட்­டுள்­ளன.

அதேபோல், கடந்த ஆண்டு இடம்­பெற்ற ஏப்­ரல் 21 குண்டுத் தாக்­கு­தலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் மீது சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலை தொடர்ந்து வரு­கின்­றது. அவர்கள் அர­சியல் ரீதியில் புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்­துள்­ளார்கள்.

எமது நாட்டில் எந்­த­வொரு அர­சாங்கம் பத­விக்கு வந்­தாலும் முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் அவர்­களின் பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்­றத்­திலும் அமைச்­ச­ர­வையில் இருப்­பார்கள் அதேபோல், மலை­யக இந்­திய வம்­சா­வளி மக்­களை எடுத்துக் கொண்டால் கடந்த அர­சாங்­கத்தில் வழ­மை­யாக அமைச்சுப் பத­வியில் இருந்து வரும் இ.தொ.கா. வினர் இடம்­பெ­றாத போதிலும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் குரல்கொடுத்து வந்­த­தோடு, மனோ கணேசன், பழனி திகாம்­பரம் ஆகியோர் அமைச்­ச­ர­வையில் இருந்­த­தோடு, வீ. இரா­தா­கி­ருஸ்ணன் அமைச்­ச­ராக இருந்தார். அர­சாங்­கத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்­பாக ஆறு பேர் பாரா­ளு­மன்­றத்தில் இருந்­தார்கள்.

எனவே, மலை­யக மக்­க­ளுக்கு தனி வீட்டுத் திட்டம் உட்­பட பல திட்­டங்­களை ஏற்­ப­டுத்த முடிந்­தது. பிர­தேச சபைகள், செய­ல­கங்கள் அதி­க­ரிப்பு, அபி­வி­ருத்தி அதி­கார சபை உட்­பட உரி­மைசார் விட­யங்­க­ளையும் பெற்றுக்கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது. அது முழுமை பெற­வில்லை என்­றாலும் அதற்­கான அடித்­தளம் இடப்­பட்­டுள்­ளமை சிறப்­பம்சம் ஆகும்.

பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் ஜனா­தி­பதி தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா நாளாந்த சம்­பளம் வழங்­கப்­படும் என்று ஜனா­தி­பதி தெரி­வித்­துள்­ளமை மக்கள் மத்­தியில் பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமான் அதைப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­கின்ற அதே­நே­ரத்தில், புதி­தாக உரு­வாக்­கப்­பட்டு அதற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யாகி, இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள ஐந்து பிர­தேச செய­ல­கங்கள் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் நடை­மு­றைக்கு கொண்டு வர வேண்டும். இவை பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வலி­யு­றுத்தப்­பட வேண்டும்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் இல்­லாமல் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­பக் ஷ தெரிவு செய்­யப்­பட்­டது போல, பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­க­ளோடு அர­சாங்கம் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்று தேரர் ஒருவர் கூறி­யுள்ளார். இவ்­வாறு இன­வாதம் தலை­தூக்­கி­யுள்ள கால­கட்­டத்தில்தான் முக்­கி­ய­மான தேர்­தலும் வரு­கின்­றது.

வடக்கில் தமிழ்க் கட்­சிகள் மூன்று அணி­க­ளாகப் பிரிந்­துள்­ளன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்கள் கூட்­டணி, தமிழ் தேசிய மக்கள் முன்­னணி உட்­பட ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்சி ஆகி­யன ஒன்றை ஒன்று குற்றம் சுமத்திக் கொண்டு தேர்­தலில் போட்­டி­யிட ஆயத்­த­மாக உள்­ளன. அதேபோல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உட்­பட முஸ்லிம் கட்­சி­களும், மலை­யகக் கட்­சி­களும் போட்­டி­யி­ட­வுள்­ளன.

இவர்கள் அனை­வரும் ஒரு­வ­ரை­யொ­ருவர் குறை கூறிக்கொண்டும், வெற்றி பெறக் கூடாது என்­ப­தற்­காக வேட்­பா­ளர்­களை போட்­டிக்­காக களம் இறக்­காமல் கடந்த கால தவ­று­களை மீண்டும் அரங்­கேற்­றாமல் சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்ற சமூக உணர்­வோடு சிந்­தித்து செயற்­படும் பட்­சத்தில் பெரு­ம்பான்மை சமூ­கத்­திற்கு நிக­ராக தலை­நி­மிர்ந்து நிற்க முடியும். தவ­றினால் அவர்­க­ளிடம் பேரம் பேசும் சக்­தியை பறி­கொ­டுத்து கையேந்தும் நிலை உரு­வாகி விடும் என்­பதும் கருத்திற் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  

ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கூட்­டணி
ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி வாகை சூடிய பொது­ஜன பெர­முன ஆட்சி அதி­கா­ரத்­திலும் இருப்­பதால் மீண்டும் ஆட்­சிக்கு வந்துவிட வேண்டும் என்ற நோக்­கத்தில் அதன் வேட்­பா­ளர்­களை களம் இறக்­கு­வதில் மும்­மு­ர­மாக இருந்து வரு­கின்­றது. அதற்கு பக்கபல­மாக ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யையும் அத­னுடன் இணைத்துக்கொண்­டுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­தலின்போது முரண்­பட்டுக்கொண்ட சில சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் இம்­முறை பொது­ஜன பெர­மு­ன­வுடன் கூட்டு சேர்ந்துகொண்­டுள்­ளார்கள். ஏனைய கட்­சி­களும் சிவில் அமைப்­பு­களும் இந்தக் கூட்­ட­ணி­யோடு சங்­க­மித்­துள்­ளன.

பொது­ஜன பெர­முன கூட்­ட­ணியின் தலை­வ­ராக மஹிந்த ராஜ­பக் ஷ இருக்கும் போது, சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரான முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதன் இணைத் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அம்­பாந்­தோட்­டையில் மகிந்த ராஜ­பக்­ஸவும், பொலன்­ன­று­வையில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் போட்­டி­யி­ட­வுள்­ளார்கள். மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற்று 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்­பதே பிர­தான நோக்­க­மாக இருக்­கின்­றது.

பத­வியில் உள்ள அர­சாங்கம் அதன் அதி­கார செல்­வாக்­குடன் அபி­வி­ருத்திப் பணி­களை வழ­மை­யாக முன்­னெ­டுத்து வரு­வ­துண்டு. அது மக்கள் மத்­தியில் பிர­பல்­யப்­ப­டு­த்தப்­பட்டு தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்கு உறு­து­ணை­யா­கவும் இருந்து விடு­கின்­றது. மேலும், அர­சாங்­கத்தின் பொறி­முறை தேர்தல் களத்தில் செல்­வாக்கு பெற்று வரு­கின்­றது. பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்கள் ஊடா­கவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் பெற்றுக் கொண்ட வெற்­றியின் ஊடா­கவும் தேர்­தலை எதிர்­கொள்ள ஆயத்­த­மாக இருக்­கின்­றது.

 ஐக்­கிய தேசியக் கட்­சியின் கூட்­டணி
சர்ச்­சை­க­ளுக்கும் உள்­ளக  முரண்­பா­டு­க­ளுக்கும் பெயர்பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியில் சஜித் பிரே­ம­தா­ஸவின் கைகள் ஓங்­கி­யுள்ள நிலையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் அவரை வேட்­பா­ள­ராக நிறுத்த இழுத்­த­டிப்­புகள் இடம்­பெற்று வந்­தது போல, பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அவர் பிர­தமர் வேட்­பா­ள­ராக நிற்­ப­தற்கும் எத்­த­னையோ சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. ஒரு­வாறு ஐக்­கிய தேசியக் கட்­சியின் கூட்­டணி தலை­வ­ராக சஜித் நிய­மனம் பெற்றும் அதற்­கான சின்னம் தொடர்பில் இன்­னுமும் சிக்கல் நிலை இருந்து வரு­கின்­றது.

நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை ஐக்­கிய தேசியக் கட்சி உட்­பட 10 அர­சியல் கட்­சிகள், 18 தொழிற்­சங்­கங்கள், 20 சிவில் அமைப்­பு­களை உள்­ள­டக்­கிய “ஐக்­கிய மக்கள் சக்தி” கூட்­டணி ஐ.தே.க. வின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தலை­மையில் கொழும்பு தாமரை தடா­கத்தில் அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் கூட்­டத்­துக்கு ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ரவி கரு­ணா­நா­யக்க, ஜோன் அம­ர­துங்க, நவீன் திசா­நா­யக்க, அகி­ல­விராஜ் காரி­ய­வசம் உட்­பட முக்­கி­யஸ்­தர்கள் சிலர் கலந்து கொள்­ள­வில்லை. அதே­நேரம், “யானை” சின்­னத்தில் தான் போட்­டி­யிட வேண்டும் என்று நிர்ப்­பந்­தித்து வரு­கின்­றார்கள்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் “யானை” சின்­னத்தில் போட்­டி­யிட்டால் “கூட்­டணி” அமைத்­ததில் அர்த்தம் இல்­லாமற் போய்­விடும். ஐக்­கிய தேசியக் கட்­சியில் போட்­டி­யி­டு­வதால் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்­பதால்தான் கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட கூட்­ட­ணிக்குத் தலை­வ­ராக அதா­வது “ஐக்­கிய மக்கள் சக்­திக்கு” தலை­வ­ராக சஜித் பிரே­ம­தாஸ நிய­மிக்­கப்­பட்டு, வேட்­பாளர் தெரிவு, தேசியப் பட்­டியல் தெரிவு என பல­வற்­றுக்கும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு அதி­கா­ரத்தை வழங்கிவிட்டு, ஐக்­கிய தேசியக் கட்­சியின் “யானை” சின்­னத்­தில்தான் போட்­டி­யிட வேண்டும் என்று கூறி அதை ஏற்றுக்கொண்டால் அதன் செய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தான் சகல ஆவ­ணங்­க­ளிலும் கையொப்பம் இடக்கூடிய அங்­கீ­காரம் பெற்­ற­வ­ராக இருப்பார்.

அதேபோல், “அன்னம்” சின்­னத்தில் போட்­டி­யிட வேண்டும் என்று தீர்­மா­னித்தால் அதன் செய­லா­ள­ராக ரவி கரு­ணா­நா­யக்க இருப்­பதால் அவ­ருக்கே சகல அதி­கா­ரங்­களும் இருக்கும். இத்­த­கைய சூழ்­நி­லையில் “ஐக்­கிய மக்கள் சக்­திக்கு” தலை­வ­ராக இருக்கும் சஜித் பிரே­ம­தாஸ பெய­ருக்குத் தான் தலை­வ­ராக இருப்­பாரே தவிர, எதையும் தீர்­மா­னிக்கும் அதி­காரம் அவ­ருக்கு இருக்­காது. எனவே, இந்தத் தேர்­தலில் ஐ.தே.க. வின் ஒற்­று­மையைக் கருத்திற் பிளவுபடாமல் இருக்கும் வகையில் தற்­கா­லி­க­மாக சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு யானை சின்­னத்தை கைய­ளித்தால் கட்சி பிளவு படு­வ­தி­லி­ருந்து காப்­பாற்றிக்கொள்­ளலாம்.  

அவ்­வாறு இல்­லையேல், சஜித் பிரே­ம­தாச வின் கூட்­டணி தனி­யான சின்­னத்தில் களம் இறங்க வேண்­டிய நிலை உரு­வாகும்., “ஐக்­கிய மக்கள் சக்­தியின்” சின்னம் எவ்­வாறு அமையப் போகின்­றது என்­பதை இந்த வாரத்தில் தெரிந்து கொள்ளக் கூடிய­தாக இருக்கும். அதன் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ இம்­முறை கொழும்பு மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்குத் தயா­ராக உள்ளார் என்று செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இ.தொ.கா. வின் வேட்­பா­ளர்கள்
2015ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட்ட இ.தொ.கா.வுக்கு இரண்டு உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே கிடைத்­தி­ருந்­தார்கள்.  ஆறு­முகன் தொண்­டமான் மற்றும் முத்து சிவ­லிங்கம் ஆகியோர் வெற்றி பெற்ற போதிலும் அமைச்சுப் பொறுப்பு எத­னையும் பெற்றுக் கொள்ள முயற்­சிக்­காமல் இருந்து வந்­தார்கள். ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­பக்ஷ பத­விக்கு வந்த பின்னர் ஏற்­பட்ட அர­சியல் மாற்­றத்தில் ஆறு­முகன் தொண்­டமான் அமைச்­ச­ராக இருக்­கின்றார். அமைச்சுப் பொறுப்­போடு தேர்­தலில் வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடத் தயா­ராக இரு­கின்­றார்கள். ஆரம்­பத்தில் 5 வேட்­பா­ளர்­களை நிறுத்­து­வ­தற்கு இ.தொ.கா. ஏற்­பாடு செய்து வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்ட போதிலும், மூன்று பேர் மாத்­தி­ரமே நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக இப்­போது தெரிய வரு­கின்­றது. அதில் ஆறு­முகன் தொண்­டமான், எம். இரா­மேஸ்­வரன் ஆகிய இரண்டு பெயர்கள் உறு­தி­யாக இருக்கும் போது, மூன்­ற­ாவது வேட்­பா­ள­ராக இடம்­பெறப் போவது இரா­ஜ­ து­ரை­யாக இருக்­கலாம் அல்­லது சக்­திவேல் போட்­டி­யி­டலாம் என்று கூறப்­ப­டு­கின்­றது.  

மேலும், பதுளை மாவட்­டத்தில் செந்தில் தொண்­டமான் போட்­டி­யி­ட­வுள்ளார். கண்டி மாவட்­டத்தில் ஆரம்­பத்தில் ஜீவன் தொண்­ட­மானின் பெயர் அடி­பட்ட போதிலும் இப்­போது பாரத் அருள்­சாமி போட்­டி­யி­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அத்­தோடு, கேகாலை, இரத்­தி­ன­புரி முத­லான இடங்­களில் சேவல் சின்­னத்தில் தனித்துப் போட்­டி­யிடப் போவ­தா­கவும் கூறி வரு­வதில் எந்­த­ளவு உண்மைத் தன்மை இருக்கும் என்று தெரி­ய­வில்லை.

பொது­ஜன பெர­முன கூட்­ட­ணியில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் எஸ். சதா­சிவம், முத்­தையா பிர­பா­கரன், அனுஷா சந்­தி­ர­சே­கரன் ஆகி­யோரின் பெயர்­களும் பிரஸ்­தா­பிக்­கப்­பட்டு வந்­தாலும் இறுதி நேரத்தில் யாருக்கு சந்­தர்ப்பம் கிடைக்கும் என்று தெரி­யாது. இம்­முறை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 8 உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளார்கள். பட்­டி­யலில் 11 பேரின் பெயர்கள் இடம்­பெறும். நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவ, வலப்­பனை, கொத்­மலை, ஹங்­கு­ராங்­கெத்த ஆகிய ஐந்து தொகு­தி­க­ளுக்கும் தலா ஒருவர் வீதம் 5 சிங்­கள வேட்­பா­ளர்கள் நிறுத்­தப்­ப­டு­வார்கள். இ.தொ.கா.வுக்கு மூன்று வேட்­பா­ளர்கள் என்றால், மிகு­தி­யாக மேலும் மூன்று வேட்­பா­ளர்­களில் மூன்று தமிழ் வேட்­பா­ளர்கள் இடம்­பெ­று­வார்கள்.

 தமிழ் முற்­போக்கு கூட்­டணி வேட்­பா­ளர்கள்
தமிழ் முற்­போக்கு கூட்­டணி மத்­தியில் இருந்து வந்த சல­ச­லப்பு கடந்த வாரம் முடி­வுக்கு வந்­துள்­ளது. அதில் அங்கம் வகிக்கும் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் சார்பில் 3 வேட்­பா­ளார்கள் போட்­டி­யிட்டால் நான்­கா­வது வேட்­பா­ள­ராக மலை­யக மக்கள் முன்­னணி போட்­டி­யி­டு­வதில் சிக்கல் நிலை உரு­வாகும் என்­பதால் மலை­யக மக்கள் முன்­னணி தனி­ வழி செல்லத் தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்டு வந்­தது. தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் கூட்டம் கடந்த வாரம் அட்­டனில் இடம்­பெற்ற போது, அதில் விளக்கம் தரப்­பட்டு பிரச்­சினை முடி­வுக்கு வந்­துள்­ளது.

 அதன் தலைவர் பி.திகாம்­பரம் பேசும் போது, நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் இரா­தா­ கி­ருஷ்ணன் உட்­பட மூன்று பேர் போட்­டி­யி­ட­வுள்­ள­தாகத் தெரிவித்­துள்ளார். அதேபோல், தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்பில் தேசியப் பட்­டியல் உறுப்­பினர் ஒரு­வரைப் பெற்றுக்கொள்ள பேச்­சு­வார்த்தை இடம்­பெற்று வரு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். எனவே, தொழி­லாளர் தேசிய சங்­கத்தில் போட்­டி­யிடப் போகும் வேட்­பா­ளர்கள் விபரம் தெரி­ய­வில்லை. அதன் தலைவர் திகாம்­பரம் தேசியப் பட்­டியல் உறு­பி­ன­ராக இருந்து கொண்டு உதயா, திலகர் ஆகி­யோ­ருக்கு இடம் கொடுப்­பாரா அல்­லது. இந்த இரு­வரில் ஒருவர் தேசியப் பட்­டி­யலில் இடம்­பெ­று­வார்­களா என்­பது விரைவில் தெரிந்து விடும்.

இது இவ்­வாறு இருக்க ஐந்து தேர்தல் தொகு­தி­க­ளிலும் ஐந்து சிங்­கள வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் போது, பட்­டி­யலில் உள்ள ஏனைய 6 வேட்­பா­ளர்­களில் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி வேட்­பா­ளர்கள் போக எஞ்­சி­யுள்ள மூன்று வேட்­பா­ளர்­களில் அட்­டன்-­ டிக்­கோயா நகர சபை உறுப்­பினர் எஸ்.கேசவமூர்த்தி இடம்பெறவுள்ளார். அடுத்ததாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவரும், ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினருமான அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் முருகையா இரவீந்திரன் பெயரும் இடம்பெறவுள்ளது உறுதி செய்யப் பட்டுள்ளது.

 அதேபோல், கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசன், பதுளை மாவட்டத்தில் ஏ. அரவிந்தகுமார், கண்டி மாவட்டத்தில் வேலு குமார் ஆகியோர் போட்டியிடவுள்ளார்கள். வடிவேல் சுரேஷ் ஐ.தே.க. சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 திலகர், ஜீவன் தேசியப் பட்டியலில்
தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த முறை பெற்றுக்கொண்ட 6 உறுப்பினர்களை இம்முறையும் தக்க வைத்துக் கொண்டு தேசியப் பட்டியல் ஊடாக ஓர் உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளும் வகையில் காயை நகர்த்தி வருகின்றது. அநேகமாக தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தேசியப் பட்டியலில் இடம்பெறலாம் என்று நம்பப்படுகின்றது.

அதேபோல், இ.தொ.கா. சார்பில் ஆறுமுகன் தொண்டமானின் மகனான ஜீவன் தொண்டமானை தேர்தலில் போட்டியிடச் செய்யும் போது எந்தளவு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று கூறப்பட்டாலும் மறுபுறம் மலையக இளைஞர்களின் எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் கூட ஆளாகலாம். எனவே, வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் இ.தொ.கா.வுக்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் ஊடாக ஜீவன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகக் கூடிய வாய்ப்பும் அதிகமாகவே காணப்படுகின்றது..  

- பானா. தங்கம்-

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07
news-image

பொன்சேகாவை அரவணைப்பாரா அநுர?

2025-03-23 12:42:43