ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்­ற­த்துக்­கான தேர்தல் 

Published By: J.G.Stephan

04 Mar, 2020 | 01:11 PM
image

நாட்டின்  எட்­டா­வது  பாரா­ளு­மன்றம் கடந்த 2ஆம் திகதி நள்­ளி­ரவு 12 மணி­யுடன் கலைக்­கப்­பட்­டுள்­ளது.  ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக வழங்­கப்­பட்­டி­ருக்­கின்ற  அதி­கா­ரங்­க­ளுக்கு அமை­வா­கவே பாரா­ளு­மன்றம்  கலைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதற்­கான விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் அர­சாங்க அச்­சக திணைக்­க­ளத்­தினால் நேற்று முன்­தினம் இரவு வெளி­யி­டப்­பட்­டது.

அதன்­படி அடுத்த  9ஆவது பாரா­ளு­மன்­றத்­திற்கு  உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தற்­காக ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி  தேர்தல் நடை­பெற­வி­ருக்­கி­றது.  தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோ­ரல்கள் இம்­மாதம் 12 ஆம் திகதி முதல்  19 ஆம் திகதி  வரை இடம்­பெ­ற­வுள்­ளன.   9ஆவது பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது அமர்வு எதிர்­வரும் மே மாதம் 14 ஆம் திகதி   நடை­பெற ஏற்­பா­டா­கி­யி­ருக்­கி­றது.

நாட்டின் பாரா­ளு­மன்­றத்­திற்கு 225  உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தற்­காக   தேர்தல்  நடை­பெ­ற­வுள்­ளது.  196  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்   மாவட்ட ரீதி­யாக  வாக்­கா­ளர்­க­ளினால்  நேர­டி­யாக   தெரி­வு­ செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.   29 பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள் தேசிய பட்­டியல் ஊடாக   தெரி­வு­செய்­யப்­ப­டு­வார்கள்.   அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்கள்   தேசிய மட்­டத்தில் பெறு­கின்ற வாக்­கு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே  தேசிய பட்­டியல் ஊடாக எத்­தனை ஆச­னங்கள் கட்­சி­க­ளுக்கு கிடைக்கும் என்­பது  தீர்­மா­னிக்­கப்­படும்.

22 தேர்தல் மாவட்­டங்கள், 160 தேர்தல் தொகு­திகள் என்ற அடிப்­ப­டையில்   ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி   தேர்தல் வாக்­க­ளிப்பு நடை­பெ­ற­ வி­ருக்­கி­றது.  தேர்தல் ஆணைக்­கு­ழு­வா­னது   நேற்று முதல்  அடுத்த பாரா­ளு­மன்ற தேர்தலை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றது.   சுமார்  600 கோடி ரூபா  அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­காக  செல­வாகும் என மதிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.  அது­மட்­டு­மன்றி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில்  அர­சியல் கட்­சிகள் மற்றும்    சுயேட்­சைக்­கு­ழுக்கள் தேர்­த­லுக்கு   தயா­ராகும் பணி­களில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளன.  விசே­ட­மாக  அர­சியல் கட்­சிகள் கூட்­ட­ணி­களை அமைக்கும்   முயற்­சி­களில் கள­மி­றங்­கி­யுள்­ளன. பெரும்­பாலும் அர­சியல் கட்­சிகள் கூட்­டணி அமைத்து  தேர்­தலில் கள­மி­றங்க   முயற்­சித்து வரு­கின்­றன. அந்த அடிப்­ப­டையில்   கூட்­ட­ணி­களை அமைக்கும் செயற்­பா­டு­களும் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கின்­றன.

கடந்த 8 ஆவது பாரா­ளு­மன்­றத்­திற்­கா­ன ­தேர்தல்  2015 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடை­பெற்­றது.  அத­ன­டிப்­ப­டையில்   நான்­கரை வரு­டங்கள் முடிவில் பாரா­ளு­மன்றம்  ஜனா­தி­ப­தி­யினால் கலைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  19 ஆவது திருத்தச் சட்டம்  கொண்­டு­வ­ரு­வ­தற்கு முன்னர்  ஜனா­தி­ப­தி­யினால் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி ஒரு­வ­ரு­டத்தில் பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் அதி­காரம் காணப்­பட்­டது. எனினும்   அர­சி­ய­ல­மைப்பின்   19 ஆவது திருத்தச் சட்­டத்தின்  ஊடாக   பாரா­ளு­மன்­றத்தை  நான்­கரை வரு­டங்­களின் பின்­னரே ஜனா­தி­ப­தியால்  கலைக்க முடி­யு­மா­ன­வ­கையில் ஏற்­பா­டுகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.  

அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்த  சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. எனவே ஜனா­தி­ப­தி­யினால்    நான்­கரை வரு­டங்கள் கடந்தே பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடியும்.  இந்­நி­லையில்  கடந்த 2 ஆம் திக­தி­யுடன் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு நான்­கரை வரு­டங்கள்  நிறை­வ­டைந்­துள்ள நிலையில்  தற்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டுள்­ளது.

எப்­ப­டி­யி­ருப்­பினும் எட்­டா­வது பாரா­ளு­மன்றம் கடந்த  2018 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 9 ஆம் திகதி  முன்னாள் ஜனா­தி­ப­தி­யினால்  கலைக்­கப்­பட்­டது.  எனினும்  அதற்கு எதி­ராக   அர­சியல் கட்­சி­களும் சிவில் அமைப்­புக்­களும்  உயர்­நீ­தி­மன்­றத்தை நாடி­யி­ருந்­தன.  இறு­தியில்  நான்­கரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் முன்­னைய ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தமை   சட்­ட­வி­ரோ­த­மா­னது என  உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

இவ்­வா­றான  வர­லாற்று  பின்­ன­ணி­யி­லேயே   எட்­டா­வது பாரா­ளு­மன்றம் தற்­போது கலைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  இந்த சூழலில்  புதிய பாரா­ளு­மன்­றத்­திற்கு சரி­யான பிர­தி­நி­தி­களை  தெரிவு செய்து  அனுப்­ப­வேண்­டிய   கட­மையும் பொறுப்பும் மக்­க­ளி­டத்­தி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

தேர்தல் என்­பது   ஜன­நா­யக செயற்­பாட்டில் மிக முக்­கி­ய­மான   ஒரு  இயங்கு கரு­வி­யாகும். தேர்­தலின் ஊடா­கவே மக்கள்  தமது ஜன­நா­யக உரி­மையை பயன்­ப­டுத்தி   பிர­தி­நி­தி­களை தெரிவு செய்து  நாட்டை ஆள்­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்­திற்கு  அனுப்­பு­கின்­றனர்.  மக்கள் ஜன­நா­யக ரீதியில்  தமக்கு விருப்­ப­மான   பிர­தி­நி­தி­களை தெரிவு செய்து  பாரா­ளு­மன்­றத்­திற்கு  அனுப்­பு­கின்­றனர்.  பாரா­ளு­மன்­றமே இந்த நாட்டில் சட்­டங்­களை உரு­வாக்­கு­வ­துடன்  நாட்டின்   ஆட்­சியை  முன்­னெ­டுத்து செல்­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலத்தை பெறு­கின்ற அர­சியல் கூட்­ட­ணியே   ஆட்சி அமைக்கும். இலங்­கையின் பாரா­ளு­மன்­றத்தைப் பொறுத்­த­வ­ரையில் 225  உறுப்­பி­னர்கள் உள்ள நிலையில் 113 ஆச­னங்­களை   பெறும்   அர­சியல் கூட்­டணி அல்­லது அர­சியல் கட்சி  ஆட்சி அமைப்­ப­தற்­கான தகு­தியை   பெறு­கின்­றது.

இந்த சூழலில்  மக்­க­ளுக்கு சேவை­யாற்­றக்­கூ­டிய சரி­யான பிர­தி­நி­தி­களை  தெரிவு செய்து அனுப்­ப­வேண்­டிய பொறுப்பு  வாக்­கா­ளர்­களின் கைகளில் இருக்­கின்­றது. அதே­போன்று  அர­சியல் கட்­சி­களும்  வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­யும்­போது ஊழ­லற்ற,  மக்­க­ளுக்கு சேவை­யாற்­றக்­கூ­டிய தகு­தி­யா­ன­வர்­களை தெரிவு செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.  நாட்டின் தலை­வி­தியை தீர்­மா­னிக்­கப்­போகும்  தேர்தல் என்­பதால்  மக்­களும் மிக நிதா­ன­மா­கவே இந்த விட­யத்தில் முடி­வெ­டுக்­க­வேண்டும். அர­சியல் ரீதி­யாக   ஆழ­மான முறையில் ஆராய்ந்தே வாக்­கா­ளர்கள்  தமது வாக்கை பயன்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும்.

அதே­போன்று அர­சியல் கட்­சி­களும்  தேர்தல் சட்டதிட்­டங்­க­ளையும் விதி­மு­றை­க­ளையும் உரிய முறையில் கடைப்­பி­டித்து தேர்­தலில் போட்­டி­யி­ட­வேண்டும்.  எக்­கா­ரணம் கொண்டும் தமது ஆத­ர­வா­ளர்­களோ அல்­லது வேட்­பா­ளர்­களோ அல்­லது தமது கட்­சி­களின் பிர­தி­நி­தி­களோ   தேர்தல் சட்ட விதி­களை மீறு­வ­தற்கு  அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்கள் இட­ம­ளிக்­கக்­கூ­டாது. தேர்தல் சட்­ட­திட்­டங்கள், விதி­மு­றைகள்  உரிய முறையில் கடைப்­பி­டிக்­க­வேண்டும் என்ற விடயம் மிக கடு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட­வேண்டும்.

இந்த இடத்தில் வாக்­கா­ளர்­க­ளுக்கும் அர­சியல் கட்­சி­க­ளுக்கும்  சிவில் அமைப்­புக்­க­ளுக்கும் பாரிய  பொறுப்பு இருக்­கின்­றது என்­பதை புரிந்து செயற்­ப­ட­வேண்டும்.  மிக முக்­கி­ய­மாக  அர­சியல் கட்­சிகள் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­யும்­போது  பெண்­க­ளுக்கும்  இளை­ஞர்­க­ளுக்கும்  அதிக வாய்ப்­புக்­களை கொடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இலங்­கையின் அர­சி­ய­லைப் பொ­றுத்­த­வ­ரையில்  அர­சி­யலில் பெண்­களின்    செயற்­பாட்டு பங்­க­ளிப்பு  மிகவும் குறைந்த மட்­டத்­தி­லேயே காணப்­ப­டு­கின்­றது.  இலங்­கையின் சனத்­தொ­கையின் 52 வீத­மானோர் பெண்­க­ளாக உள்­ளனர். எனினும்   225 உறுப்­பி­னர்­களைக் கொண்ட   பாரா­ளு­மன்­றத்தில்  ஐந்­து­ வீ­த­மான  பெண்­களே நீண்­ட­கால­மாக  அங்கம்  வகித்து வந்­தனர்.

இது ஆரோக்­கி­ய­மான நிலைமை அல்ல. பெண்­களின் பங்­க­ளிப்பும்  குறிப்­பி­டத்­தக்­க­ளவில் அர­சி­யலில் இருக்­க­வேண்டும்.  இதற்கு  அர­சியல் கட்­சி­களும் வாக்­கா­ளர்­களும்  தமது ஆத­ரவை வெளிப்­படுத்­த ­வேண்டும்.  இந்த இரண்டு தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்கும் பட்­சத்­தி­லேயே பெண்­களின் அர­சியல்   பிர­தி­நி­தித்­து­வங்­களை  அதி­க­ரிக்க  முடியும்.

எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போது ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்றத் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சியல் கட்­சிகள்   தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும்.  அனல்பறக்கும் பிரசாரங்கள் இடம் பெறும்.  இந்த இடத்தில் மிக முக்கியமாக அனைத்து தரப்பினரும்  சட்ட திட்டங்களை மதித்து நடக்கவேண்டும் என்பதே மிக முக்கியமாகும்.  அடுத்த ஐந்து வருடங்களுக்கு  தம்மை ஆளப்போகின்ற  பிரதிநிதிகள்  எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கவேண்டும். எனவே வாக்காளர்கள் சிந்தித்து  வாக்களிக்கவேண்டும். வாக்களிக்காமல் விடுவது தமது ஜனநாயக  உரிமைகளை பயன்படுத்தாமல் இருப்பதற்கு சமனாகிவிடும். எனவே அவ்வாறு இல்லாமல்   வாக்காளர்கள்   ஜனநாயக உரிமையை  உச்ச பட்சமாக பயன்படுத்தி வாக்களிக்கவேண்டும். முக்கியமாக   பண்பான  மக்களுக்கு சேவையாற்றக்கூடிய  ஊழலற்ற வெளிப்படையான தலைவர்களை    உருவாக்கவேண்டிய பொறுப்பு  வாக்காளர்களிடமே காணப்படுகின்றது.    

எனவே ஏப்ரல் 25 ஆம் திகதி மக்கள்  சரியான தீர்மானத்தை எடுத்து  தகுதியான  மக்கள்  பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளு மன்றத்திற்கு  அனுப்பவேண்டும்.

(04.03.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முற்றுகைக்குள் யூ.எஸ். எயிட் நிறுவனமும் அரசாங்க...

2025-02-19 09:53:29
news-image

ரணில் தரப்புடன் கூட்டு ; காலை...

2025-02-18 13:26:36
news-image

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி...

2025-02-17 21:09:44
news-image

மிக மோசமான கொலை! : ஜனநாயகத்தின்...

2025-02-18 11:22:36
news-image

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய...

2025-02-17 14:25:08
news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58