அமெரிக்காவின் டென்னிஸ் மாநிலத்தின் தலைநகர் நாஷ்விலியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக பல பெறுமதிவாய்ந்த உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 25 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
குறித்த சூறாவளியால் அம்மாநிலத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிஸ் மாநிலத்தில் நேற்று கடுமையான சூறாவளி தாக்கியது.
அதிவேகத்தில் வீசிய சுழல் காற்றுடன் கூடிய சூறாவளியால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. பல வீடுகளின் கூரைகள் முழுவதும் சூறாவளியில் சிக்கி பறந்தன.
மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.
பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். வீதிகளில் நின்ற வாகனங்கள் மற்றும் விமானங்களும் சூறாவளியின் பிடியில் இருந்து தப்பவில்லை. வீதிகளில் ஆங்காங்கே வாகனங்கள் கவிழ்ந்து கிடந்தன.
சூறாவளியில் சிக்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 25 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், அவர்களுக்குரிய நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM