திருடும் நோக்கில் வீடொன்றுக்குள் புகுந்த திருடன் தான் எதிர்பார்த்த பணமோ நகையோ அங்கு கிடைக்காமையை அடுத்து அவ்வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவுகளை உட்கொண்டுவிட்டு, மறதியாக தான் கொண்டுவந்த வாள், கத்தியினை வைத்து விட்டு பிறிதொரு கத்தியினை எடுத்துச்சென்ற சம்பவமொன்று கம்பளை அட்டபாகை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை அட்டபாகை தோட்டத்தில் அண்மைக்காலமாக திருடர்களின் தொல்லைகள் அதிகரித்து காணப்படுவதோடு இவர்களால் பாலியல் வல்லுறவு முயற்சிக ளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் கடந்த 3ஆம் திகதி அட்ட பாகை தோட்ட எல்லையில் அமைந்துள்ள பெரும்பான்மைச் சமூகத்தினர் வாழும் கிராமத்திற்குள் புகுந்த திருடனொருவன் முத லில் சிறுகைத்தொழில் முயற்சியாளரின் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த 1400 ரூபா பணத்தினை கொள்ளையிட்டுக்கொண்டு, அப்படியே அயல்வீட்டுக்கூரையினூடாக அந்த வீட்டுக்குள் புகுந்து, அங்கு எல்லா இடங்களில் தேடியும் தான் எதிர்பார்த்த பணமோ நகையோ கிடைக்காமல் போகவே அந்த வீட்டு சமையலறையில் சமைத்து வைத்திருந்த பலாக்காய் கறியினையும் சோற்றினையும் சாப்பிட்டுவிட்டு அடுப்பு கரியினைக்கொண்டு நன்றி என்ற வாசகத்தினையும் எழுதி வைத்து விட்டு மறதியாக தான் கொண்டுவந்த வாள் மற்றும் கத்தியினை வைத்துவிட்டு அந்த சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பிறிதொரு கத்தியினை எடுத்து சென்றுள்ளான்.
இச்சம்பவம் தொடர்பான முறைப்பாடு கம்பளை பொலிஸ் நிலையத்தில் செய் யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM