புத்தளத்தில் வீடொன்றிலிருந்து சீனநாட்டவரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

03 Mar, 2020 | 05:55 PM
image

புத்தளம் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடா மெதவாச்சிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

65 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்த இலங்கை பிரஜாவுரிமை பெற்ற நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த குறித்த சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபர், உயிரிழந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி...

2025-04-18 07:50:10
news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

உணவருந்தச் சென்றவர்கள் மீது காலியிலுள்ள ஹோட்டல்...

2025-04-18 07:23:41
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59