புத்தளத்தில் வீடொன்றிலிருந்து சீனநாட்டவரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

03 Mar, 2020 | 05:55 PM
image

புத்தளம் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடா மெதவாச்சிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

65 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்த இலங்கை பிரஜாவுரிமை பெற்ற நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த குறித்த சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபர், உயிரிழந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41