தொழி­லா­ளர்­க­ளுக்கு முத்­த­ரப்பு ஏமாற்றம்

Published By: J.G.Stephan

03 Mar, 2020 | 04:11 PM
image

மார்ச் முதலாம் திக­தி­யி­லி­ருந்து ஆயிரம் ரூபா சம்­பளம் அமு­லாகும் என்று அர­சாங்­கமும் தொழிற்­சங்­கங்­களும் கூறி வந்­தாலும் அம்­மா­தத்­திற்­கு­ரிய சம்­பளம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திக­தியே வழங்­கப்­படும் என்­பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தொழிற்­சங்­கங்கள் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரை  பேச்­சுக்கள் நடத்­தலாம். ஆனால் இம்­மாத ஆரம்­பத்தில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் சாத்­தி­யங்கள் உள்­ளதால் அதற்கு அடுத்த கட்டம் என்­ன­வாகும் என்­பது தான் அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாக உள்­ளது. 

அர­சாங்கம்,தொழிற்­சங்­கங்கள், கம்­ப­னிகள் என  முத்­த­ரப்­பி­லி­ருந்தும் சம்­பள விட­யத்தில் ஏமாற்­றத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளனர் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள். கம்­ப­னிகள் முன்­வைத்த சில கோரிக்­கை­களை தொழிற்­சங்­கங்கள் ஏற்­றுக்­கொள்­வதில் சிக்­கல்­களை எதிர்­நோக்­கு­வ­தா­லேயே முத்­த­ரப்பு ஒப்­பந்தம் தாம­த­மா­கி­யுள்­ளது. எனினும் இங்கு ஒரு விட­யத்தை பலரும் புரிந்து கொள்ளல் அவ­சியம். மார்ச் முதலாம் திக­தி­யி­லி­ருந்து ஆயிரம் ரூபா சம்­பளம் அமு­லாகும் என்று அர­சாங்­கமும் தொழிற்­சங்­கங்­களும் கூறி வந்­தாலும் அம்­மா­தத்­திற்­கு­ரிய சம்­பளம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திக­தியே வழங்­கப்­படும் என்­பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே தொழிற்­சங்­கங்கள் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரை  பேச்­சுக்கள் நடத்­தலாம். ஆனால் இம்­மாத ஆரம்­பத்தில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் சாத்­தி­யங்கள் உள்­ளதால் அதற்கு அடுத்த கட்டம் என்­ன­வாகும் என்­பது தான் அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாக உள்­ளது. ஏனென்றால், பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­வுடன் தேர்­த­லுக்­கான திக­தியை தேர்­தல்கள் திணைக்­களம் அறி­வித்து விடும். அநே­க­மாக ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் இடம்­பெ­றலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

தேர்தல் முனைப்பில் தொழி­லா­ளர்­களின் ஆயிரம் ரூபா விவ­கா­ரத்­தைப்­பற்றி எவ­ருமே கணக்­கி­லெ­டுக்­கப்­போ­வ­தில்லை. ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­கு­று­தி­யாக ஆயிரம் ரூபா இருந்­தது போன்று,  பொதுத்­தேர்தல் வாக்­கு­று­தி­யா­கவும் இது மாறி­னாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.  இந்­நி­லையில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் காலம் வரை இந்த விவ­காரம் நீ­டிக்­கப்­பட்­டதா என்ற சந்­தேகம் கூட சில­ருக்கு எழு­வதில் நியாயம் உள்­ளது. 

இந்­நி­லையில் கம்­ப­னிகள் ஆயிரம் ரூபா நாள் சம்­ப­ளத்தை வழங்­கு­வ­தற்கு முன்­வந்­தாலும் சில கோரிக்­கை­களை  தற்­போது வலி­யு­றுத்தி வரு­வ­தாகத் தெரி­கின்­றது.

அதில் பிர­தா­ன­மான இரு விட­யங்கள் அடங்­கு­கின்­றன.

1) பெண்கள் நாளாந்தம் 20 கிலோ வரை கொழுந்து பறித்தல் வேண்டும்

2) ஆண்­களின் வேலை நேரம் 8 மணித்­தி­யா­ல­மாக இருத்தல் அவ­சியம்

மேற்­கு­றிப்­பிட்ட இரு விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி தமது கோரிக்­கை­களை கம்­ப­னிகள் முன்­வைத்­துள்­ளன. இதில் இரண்­டா­வது விடயம் கவ­னிக்­கப்­பட வேண்­டி­யது. ஏனெனில் தற்­போது பெருந்­தோட்­டப்­ப­கு­தி­களில் அதிக நேரம் உழைப்­ப­வர்­க­ளாக பெண்­களே விளங்­கு­கின்­றனர். அவர்கள் இல்­லை­யென்றால் தேயிலை தொழிற்துறையே இல்லை என்று கூறு­ம­ள­விற்கு அவர்­களின் பங்­க­ளிப்­புகள் உள்­ளன. ஆண் தொழி­லா­ளர்­களோ தமக்கு விதிக்­கப்­பட்ட பணியை (norm) கால நேரத்­திற்குள் முடித்து விட்டு வீடு திரும்பி விடுவர் அல்­லது வேறு வேலை­க­ளுக்குச் சென்று விடுவர். ஆகவே ஆண் தொழி­லா­ளர்­க­ளி­ட­மி­ருந்து அதிக உற்­பத்­தியை கம்­ப­னிகள் எதிர்­பார்ப்­பது நியா­ய­மா­க­வுள்­ள­தாக சில தொழிற்­சங்க தரப்­புகள் தெரி­விக்­கின்­றன.

ஆனால் பெண் தொழி­லா­ளர்­க­ளுக்கு முன் வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கைகள் தற்­போ­தைய சூழ்­நி­லையில் நியா­யப்­ப­டுத்த முடி­யா­த­தா­க­வுள்­ளன. கம்­ப­னிகள் பெருந்­தோட்­டங்­களை குத்­த­கைக்கு எடுத்து 27 வரு­டங்­க­ளா­கின்­றன. சில கம்­பனிகள் தோட்­டங்­களின் சிறப்­பான நிர்­வா­கத்தால் தேயிலை மீள் பயி­ரி­டுதல், தரிசு நிலங்­களை உற்­பத்­திக்­காக பயன்­ப­டுத்துல் போன்ற செயற்­பா­டுகள் இடம்­பெற்­றுள்­ளன. ஆனால் பல தோட்­டங்­களில் தேயிலை மலைகள் காடு­க­ளாகி உள்­ளன. பழைய தேயிலை மலை­க­ளி­லேயே இன்னும் தேயிலை பறிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. 

தற்­போது நாளாந்தம் 18 கிலோ தேயி­லை­யையே பறிக்க முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது. அப்­படி பறித்­தாலும் தேயிலை இல்லை என்ற கார­ணத்தை கூறி தோட்ட நிர்­வா­கங்கள் வேலை நாட்­களை குறைக்கும் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் நாள் ஒன்­றுக்கு 20 கிலோ தேயிலை கொழுந்தை எங்­ஙனம் பறிப்­பது?

உற்­பத்தி அதி­க­ரிப்பு முறை­யி­லான சம்­ப­ளத்­திட்­டத்தை முன்­வைத்­தி­ருக்­கின்றோம் என கம்­ப­னிகள் தெரி­வித்­தாலும் தமது காலத்தில் மீள் பயிர்ச்­செய்­கை­களை இவை ஊக்­கு­விக்­க­வில்லை. அதா­வது உற்­பத்தி அதி­க­ரிப்­புக்­கான எந்த வழி­வ­கை­க­ளையும் தோட்ட நிர்­வா­கங்கள் அறி­மு­கப்­ப­டுத்­த­வில்லை. அதே வேளை கம்­ப­னிகள் ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்­புக்கு கோரிக்­கை­களை முன் வைத்தால் அதை நிறை­வேற்­று­வதில் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு பல சிக்­கல்கள் இருக்­கின்­றன.

ஆரம்­பத்தில் ஆயிரம் ரூபாவை எப்­ப­டி­யா­வது பெற்­றுத்­த­ரு­கிறோம் என்றே தொழிற்­சங்­கங்கள் கூறின. மேல­தி­க­மாக தொழி­லா­ளர்­க­ளுக்கு சுமையை ஏற்­ப­டுத்தும் வகையில்  எந்த விட­யங்கள் பற்­றியும் பேசப்­ப­ட­வில்லை. அதேவேளை எதிர்­த­ரப்பு தொழிற்­சங்­கங்­களும் தொழி­லா­ளர்­க­ளுக்கு எந்த நிபந்­த­னை­க­ளையும் விதிக்­காது ஆயிரம் ரூபா நாளாந்த சம்­ப­ளத்தைப் பெற்­றுத்­தந்தால் வர­வேற்போம் என்று தெரி­வித்­தி­ருந்­தன. 

தற்­போது கம்­ப­னிகள் எதிர்­பார்க்கும் நிபந்­த­னை­க­ளுக்கு கட்­டுப்­பட்டால் தான் ஆயிரம் ரூபா கிடைக்கும் என்றால் கூட்டு ஒப்­பந்த தொழிற்­சங்­கங்­க­ளுக்கு தேர்தல் காலத்தில் அது பாத­க­மான விட­ய­மாக அமை­யலாம். அதேவேளை இந்த விவ­கா­ரத்தை   எதிர்­த­ரப்பு தொழிற்­சங்­கங்கள் தேர்தல் காலத்தில் தமது பிர­சார பரப்­பு­ரை­யாக்­கிக்­கொள்­ளலாம்.  

எனவே தற்­போது கூட்டு ஒப்­பந்த அமைப்­பு­களில் அர­சாங்கம் பக்­க­மி­ருக்கும் இ.தொ.காவுக்கு நெருக்­க­டி­யான நிலைமை ஏற்­பட்­டி­ருப்­பதை மறுக்க முடி­யாது.  கம்­ப­னிகள் மற்றும் தொழி­லா­ளர்கள் இரு­சா­ரா­ருக்கும் பதில் சொல்ல வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. 

தேர்­த­லுக்­குப்­பின்னர் புதிய திட்டம்

கூட்டு ஒப்­பந்­தத்தின் படி தமக்கு ஆயிரம் ரூபா வழங்க முடி­யாது என கம்­ப­னிகள் 2015 இலி­ருந்து கூறி வரு­கின்­றன. ஆனாலும் அந்த முறை­யி­லேயே தங்­கி­யி­ருக்க தொழிற்­சங்­கங்கள் விரும்­பு­கின்­றன. கூட்டு ஒப்­பந்­தத்­திற்கு வெளியே வந்தால் ஆயிரம் ரூபாவை விட அதி­க­மாக தொழி­லா­ளர்­களால் ஊதி­யத்தை பெற முடியும் என கம்­ப­னிகள் கூறு­வதில் உண்­மை­யில்­லா­ம­லில்லை. 

ஆனால் அதற்­குப்­பி­றகு தொழி­லா­ளர்­க­ளுக்கும் தொழிற்­சங்­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான நெருக்கம் குறையும் அபா­ய­முள்­ளது. தற்­போதும் நெருக்கம் அதி­க­மா­க­வுள்­ளது என்று கூற முடி­யாது. 

எனினும் தொழி­லா­ளர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பளம் தமக்­கூ­டா­கவே கிடைக்க வேண்டும் என தொழிற்­சங்­கங்கள் விரும்­பு­கின்­றன.

எனினும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­குப்­பின்னர் புதிய சம்­ப­ளத்­திட்­ட­மொன்றை அர­சாங்கம் அமுல்­ப­டுத்­த­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. அதன் கார­ண­மா­கவே  அர­சாங்­க­மா­னது   தேசிய சம்­பளக் கொள்­கை­யொன்றை தயா­ரித்தல் மற்றும் நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்­பாக   ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கும் உத­வு­வ­தற்கும் தேசிய சம்­பள ஆணைக்­கு­ழு­வொன்றை ஸ்தாபித்­துள்­ளது. 

 இதற்­கான  வர்த்­த­மானி அறி­வித்தல்  கடந்த 14 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது.  அரச மற்றும் தனியார் துறை­களின் சம்­ப­ளங்கள் மற்றும் வேத­னங்­களின் பேண்­த­கை­மையை தொடர்ச்­சி­யாக பேணு­வ­தற்­காக அத்­து­றை­களின் சம்­ப­ளங்கள் உள்­ளிட்ட அனைத்து ஊதிய கட்­ட­மைப்­புக்­க­ளையும் மீளாய்வு செய்து, அரச துறை­யிலும் தனியார் துறை­யிலும் தொழிற்­படை தேவைக்­கேற்ப இதனை மேற்­கொள்­வது இதன் நோக்­க­மாகும். 

 இலங்­கை­யைப்­பொ­றுத்­த­வரை பெருந்­தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களை எந்த பிரி­வுக்குள் அடக்­கு­வது என்­பது இது நாள் வரை அர­சாங்­கங்­க­ளுக்கு குழப்­ப­மா­கவே இருந்துள்ளது. தனியார் கம்பனிகளின் கீழ் தோட்டங்கள் இருந்தாலும் அவர்களின் சம்பளத்திட்டம் கூட்டு ஒப்பந்தம் என்ற பொறிக்குள் மாட்டியிருப்பதால் தனியார் துறையினருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.  இதன் காரணமாகவே இவர்கள் வேதன விடயத்தில் புறந்தள்ளப்பட்டு வருகின்றனர். தனியார் துறையினருக்கு வழங்கப்படும் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்திட்டம் கூட இல்லாது தனியார் துறை பிரிவுக்குள் பணி புரியும் ஒரே வர்க்கத்தினராக இவர்கள் விளங்குகின்றனர்.

எது எப்படியானாலும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியே தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா படி சம்பளம் கிடைக்கும் என இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பதாக இம்மாதத்தில் அது உறுதி செய்யப்படல் அவசியம். அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

- சிவலிங்கம் சிவகுமாரன் -

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...

2025-03-16 15:25:50
news-image

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்

2025-03-16 14:51:10
news-image

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...

2025-03-16 15:03:08
news-image

ஈரான் மூலோபாயம்

2025-03-16 13:25:56
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே

2025-03-16 13:07:00