காணி­ வி­டு­விப்பை தொடர்ந்தும் தாம­தப்­ப­டுத்தவேண்டாம்..!

Published By: J.G.Stephan

03 Mar, 2020 | 11:46 AM
image

கேப்­பாப்­பு­லவு கிராம மக்கள் தமது காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி கடந்த  2017 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி ஆரம்­பித்த தொடர்  கவ­ன­யீர்ப்புப் போராட்டம்  நேற்று முன்­தி­னத்­துடன் மூன்று வரு­டங்­களை கடந்­துள்ள நிலையில்   அப்­ப­கு­தியில் மக்கள் எஞ்­சி­யுள்ள தமது காணி­களை உட­ன­டி­யாக  விடு­விக்­கு­மாறு வலி­யு­றுத்தி பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். 

மக்கள் பிர­தி­நி­திகள்,  பாதிக்­கப்­பட்ட மக்கள் என  பல்­வேறு தரப்­பினர் இந்த  மூன்று வருட  நிறை­வு­ போ­ராட்­டத்தில்   பங்­கேற்று  இந்த மக்­களின் காணி­களை  விடு­விப்­ப­தற்­கான  நட­வ­டிக்­கை­களை  அர­சாங்­கமும் பாது­காப்­புத்­த­ரப்பும் உட­ன­டி­யாக   முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென்ற  கோரிக்­கையை   விடுத்­தி­ருந்­தனர். 

ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனி­வாவில் தற்­போது நடை­பெற்று வரு­கின்ற நிலை­யி­லேயே  கேப்­பாப்­பு­லவு மக்­களின்  காணி மீட்புப் போராட்­டத்தின் மூன்று வருட நிறைவு போராட்டம்   கேப்­பாப்­பு­லவு பகு­தியில் நடை­பெ­று­கின்­றமை இங்கு விசேட அம்­ச­மாக உள்­ளது.  யுத்­த­கா­லத்­தின்­போது பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட   காணி­களை  விரை­வாக  உரிய   உரி­மை­யா­ளர்­க­ளிடம்   வழங்­கி­விட வேண்­டு­மென்று ஐக்­கி­ய­நா­டுகள் சபையும்   சர்­வ­தேச சமூ­கமும் பாதிக்­கப்­பட்ட மக்­களும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலை­யி­லேயே   இந்த  ஆர்ப்­பாட்டம்  பாதிக்­கப்­பட்ட கேப்­பாப்­பு­லவு மக்­க­ளினால் நேற்று முன்­தினம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 

கடந்த 2017ஆம் ஆண்டு ஜன­வரி 31 ஆம் திகதி பிலக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்தில்  பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி நடத்­திய  ஆர்ப்­பாட்­டத்தின் பய­னாக   அவ்­வ­ருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி அளவில்   அவர்­க­ளது காணிகள் விடு­விக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்தே  கேப்­பாப்­பு­லவு பகு­தியில் 400 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட காணி­களை  விடு­விக்­கு­மாறு கோரி அப்­பி­ர­தேச மக்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். அந்த ஆர்ப்­பாட்டம் கடந்த  மூன்று வரு­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

குறித்த பகு­தியில் கூடா­ரங்­களை அமைத்து பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக  தமது காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி   போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். எவ்­வா­றெ­னினும் கடந்த நல்­லாட்சி   அர­சாங்­கத்­தினால் இப்­ப­கு­தியில் இரண்டு கட்­டங்­களில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு காணிகள்  விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தன.  எனினும் இன்னும்   பல  ஏக்கர்  காணிகள்   பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ள­தாக பொது­மக்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை   முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

இந்த  போராட்­டத்தில் பங்­கெ­டுத்­தி­ருந்த தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் மக்­களின் இந்த காணி­வி­டு­விப்பு விட­யத்தில்  ஐக்­கி­ய­ நா­டுகள்  மனித   உரிமைகள் பேரவை அழுத்தம் பிர­யோ­கிக்­க­வேண்­டு­மென   தெரி­வித்­தி­ருந்தார். 

கேப்­பாப்­பு­லவு மக்கள் தமது பூர்­வீ­க­மான காணி­களை விடு­விக்­கும்­படி தொடர்­ச்சி­யாக மூன்று வரு­டங்களாக போராடி   நான்­கா­வது ஆண்டில் காலடி எடுத்து வைத்­தி­ருக்­கின்­றார்கள் . இந்த மக்­க­ளுக்கு சொந்­த­மான பூர்­வீக நிலத்­திலே அந்த மக்­க­ளுக்கு சொந்­த­மான வாழ்­வா­தா­ரங்கள் அனைத்­தையும் இழந்து நிர்க்­க­தி­யற்ற நிலை­யிலே யுத்தம் நிறை­வ­டைந்து பத்து வரு­ட­கா­ல­மாக வாழ்­வ­தற்­கான எந்­த­வி­த­மான அடிப்­படை வச­தி­களும் அற்ற நிலையில் இருக்­கின்­றார்கள்  என்றும்  போராட்­டத்­தின்­போது  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

இலங்கை அர­சாங்கம் ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கிய வேளையில் இந்த நிலங்கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும்; விடு­விப்போம் என்று வாக்­கு­றுதி வழங்­கி­யது. ஆனால் இன்னும் இந்த நிலங்கள் விடு­விக்கப்பட­வில்லை. யுத்­தத்­தாலும் பாதிக்­கப்­பட்டு நிலங்­க­ளையும் இழந்து இருக்­கின்ற கேப்­பா­ப்பு­லவு மக்­க­ளுக்கு அர­சாங்­கமும் சர்­வ­தேச சமூ­கமும் விசே­ட­மாக ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையும் மக்­க­ளுக்­கான இந்த நிலங்­களை விடு­விப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கையை எடுக்­க­வேண்டும். தற்­போது இருக்­கின்ற ஜனா­தி­பதி, பிர­தமர் இன்னும்  இந்த மக்­களை நடுத்­தெ­ருவில் விடாது இந்த மக்­க­ளுக்­கு­ரிய நிலங்­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். 

காணி­களை இழந்த மக்­க­ளுக்கு எந்­த­ளவு ­தூரம் அது­தொ­டர்­பான வலி இருக்கும் என்­பதை அர­சாங்­கமும் இந்த காணி­களை தம்­வசம் வைத்­தி­ருக்­கின்ற தரப்­பி­னரும் உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். வடக்கு, கிழக்கு மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் விவ­சா­யத்­துடன்  நெருங்­கிய தொடர்பு கொண்­டி­ருக்­கின்ற மக்கள். எனவே அவர்கள்  தமது சொந்த காணிகள் விட­யத்தில் எந்­த­ள­வு­தூரம்  உணர்­வு­பூர்­வ­மாக இருப்­பார்கள் என்­பதை அனைத்து தரப்­பி­னரும் அவ­சியம் புரிந்­து­கொள்­வது இன்­றி­ய­மை­யா­தது.  இந்த மக்கள்  வேறு­யா­ரு­டைய காணி­க­ளையும் கோர­வில்லை. மாறாக, தமது சொந்­தக்­கா­ணிகள்   தம்­மி­ட­மி­ருந்து   யுத்­த ­கா­லத்தில்  பல்­வேறு கார­ணி­களை வெளிப்­ப­டுத்தி அப­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளையே விடு­விக்­கு­மாறு   பாதிக்­கப்­பட்ட  மக்கள் கோரு­கின்­றனர். தற்­போது அர­சாங்­கத்­தினால் இந்த காணி விடு­விப்பு தொடர்பில் பல்­வேறு கார­ணங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.   

விசே­ட­மாக இந்த காணி­க­ளுக்கு அந்த தரப்­பி­ன­ரிடம்  உறு­திகள் இல்லை என்ற விடயம் மற்றும் அவை  வேறு திணைக்­க­ளங்­க­ளுக்கு சொந்­த­மா­னவை போன்ற கார­ணிகள்   முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.  இந்த இடத்தில் பாதிக்­கப்­பட்ட   மக்­களின் நோக்­கி­லி­ருந்து இந்த விட­யத்தை மனி­தா­பி­மான ரீதியில் ஆரா­ய­வேண்டும் என்­பதே அவ­சி­ய­மாக இருக்­கின்­றது.  முக்­கி­ய­மாக  ஒரு சரி­யான பொறி­முறை உரு­வாக்­கப்­பட்டு   தக­வல்­களை உறு­திப்­ப­டுத்தி காணி­களை விடு­விப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். எனினும் யுத்தம் நிறை­வ­டைந்து  11 வரு­டங்கள் கடந்­து­வி­டப்­போ­கின்ற சூழலில்  இன்னும் காணிகள் விடு­விக்­கப்­படாமல் இருக்­கின்­றமை கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். அதுவும்  சில பிர­தே­சங்­களில் மக்கள்  தொடர்  போராட்­டங்­களை காணி விடு­விப்பை வலி­யு­றுத்தி முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

கடந்த காலங்­களில்  முற்­று­மு­ழு­தாக   காணி விடு­விப்பு நட­வ­டிக்­கையில்  முன்­னேற்றம் ஏற்­ப­ட­வில்லை என்று   யாரும் கூற முடி­யாது. காரணம், குறிப்­பி­டத்­தக்­க­ளவு காணிகள் முன்­னைய காலத்தில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தன.   எனினும் இன்னும் அதி­க­மான அளவு காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டி­யி­ருப்­ப­தா­கவே  பாதிக்­கப்­பட்ட மக்­களும் அந்த மக்­களின் பிர­தி­நி­தி­களும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். 

எனவே இது தொடர்­பாக  சரி­யா­ன­தொரு  அணு­கு­மு­றையும்  பொறி­மு­றையும் அவ­சி­ய­மா­கின்­றன.   ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­

பக் ஷ  ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் பல சந்­தர்ப்­பங்­களில்  இந்த மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து  கருத்து வெளி­யிட்­டிக்­கின்றார்.  மிக முக்­கி­ய­மாக   தாம் 2015 ஆம்­ ஆண்­டுக்கு முன்னர் ஆட்­சியில் இருந்­த­போது  காணி விடு­விப்பு தொடர்பில்  பாது­காப்பு தரப்­பி­ன­ருடன் இணைந்து ஒரு திட்­டத்தை  வகுத்­தி­ருந்­த­தா­கவும்  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ    ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ப­தற்கு முன்னர் தெரி­வித்­தி­ருந்தார்.  அதனால் தற்­போது  இந்த காணி­களை விடு­வித்து  பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் ஒரு புதிய  எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­ப­திக்கு  சிறந்த சந்­தர்ப்பம்  கிடைத்­தி­ருக்­கின்­றது.  எனவே விரை­வாக   இது  தொடர்பில் தேவை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என   அனைத்து தரப்­பி­னரும் எதிர்­பார்க்­கின்­றனர்.   

தொடர்ந்தும் பாதிக்­கப்­பட்ட மக்கள் வீதி­க­ளி­லி­ருந்து  போரா­டிக்­கொண்­டி­ருப்­ப­தற்கு   அனு­ம­திக்­காமல்   அந்த மக்­களின் காணி­களை   விடு­விப்­ப­தற்கு அர­சாங்­கமும்  சம்­பந்­தப்­பட்ட  நிறு­வ­னங்­களும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தாகும்.  இந்த பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில்   தமது காணிகள் மீள  தமக்கு கிடைக்கும் பட்சத்தில்  அதனூடாக அவர்கள்  மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் புதியதொரு எதிர்பார்ப்பையும்  ஏற்படுத்திக்கொள்வார்கள் என்பது  இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய  விடயமாகும். அரசாங்கம்  இது தொடர்பில் ஒரு ஆழமான ஆய்வை முன்னெடுத்து   பொதுமக்களின்  விடுவிக்க முடியுமான காணிகளை விரைந்து விடுவிப்பதற்கு முயற்சிப்பது முக்கியமாகின்றது. 

தேசிய பாதுகாப்பு விடயத்தில் ஒரு சில காணிகளை விடுவிக்க முடியாத  கட்டாய நிலைமை ஏற்பட்டால் அது தொடர்பில் பாதிக்கப் பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனையுடன் அவற்றுக்கான உரிய இழப்பீடுகளை வழங்கவேண்டும். இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து  சரியானதொரு மாற்று ஏற்பாடு முன்னெடுக்கப்படவேண்டும். இவை அனைத்தும்  மிகவும் வெளிப்படையாகவும் நியாயமாகவும் உரிய   முறையிலும் முன்னெடுக்கப்படவேண்டியது  மிகவும் அவசியம்  என்பதை    குறிப்பிட்டுக்கூற விரும்புகின்றோம். 

(03.03.2020 வீரகேசரி நாளிதழின்  ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07
news-image

பொன்சேகாவை அரவணைப்பாரா அநுர?

2025-03-23 12:42:43