(ஆர்.விதுஷா)
முன்வைத்த காலை நான் ஒருபோதும் பின்வைக்க மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினரும் நம்பிக்கையுடன் வலது காலை முன்வைத்து மக்கள் சக்தி கூட்டணியுடன் இணைந்து கொள்ளவேண்டும். அச்சமின்றி வலுவான நாட்டை கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் எம்முடன் கைகோருங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
இன்றைய தினம் (நேற்று) வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இலங்கை அரசியல் வரலாற்றில் பல முக்கியமான சம்பவங்கள் நடந்தேறிய நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது. அந்த வகையில் மக்கள் விரும்பும் ஜனநாயக ஆட்சியின் ஆரம்பமாக இந்த கூட்டணியை மக்கள் மயப்படுத்துவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த கூட்டணிகள் வெறுமனே தேர்தலை மையமாக கொண்டதாகவே இருந்தன. ஆயினும் இந்த கூட்டணியானது அவ்வாறான கூட்டணியல்ல. மாறாக, நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பயணிக்கவுள்ள கூட்டணியாகும். பொதுத்தேர்தலில் வெற்றியடைந்து தொடர்ந்து முன்னோக்கிய இலக்கை நோக்கி பயணிக்கவுள்ளோம்.
நாட்டினுள் புதிய மாற்றத்தை உருவாக்குவதற்காகவும் இன,மத, பேதங்களை மறந்து தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்காகவுமே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தவரும் சமமான உரிமைகளுடன் வாழத்தகுந்த நாட்டை உருவாக்க வேண்டியது அவசியமானதாகும்.
இன, மத பேதம் நாட்டினுள் உருவாவதை நாம் கடுமையாக கண்டிக்கின்றோம். அந்த வகையில் பயங்கரவாத, அடிப்படைவாத சக்திகளுக்கு நாட்டினுள் இடமில்லை. அத்துடன், வன்முறைகளின்றி நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்துக்கமைய உருவாக்கப்பட்ட கூட்டணியாகும். அந்த வகையில் இந்த கூட்டணியை தனிமனிதனால் உரிமை கோர முடியாது. மாறாக அனைத்து மக்களுடைய உரித்தானதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய செயற்பாடுகளுக்கு இந்த கட்சியினுள் இடமில்லை. மாறாக அனைத்து மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலேயே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த கூட்டணியில் தாய்நாட்டுக்கும் நாட்டின் பிரஜைகளுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டு பிரஜைகள் ஒன்றிணைவதன் ஊடாகவே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அதன் ஊடாகவே சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கக் கூடியதாகவிருக்கும்.
சிறந்த பொருளாதார கொள்கைகளை வகுப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஏற்ற நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் புதிய மாற்றத்தை நோக்கிய பயணமாக இது அமைய வேண்டும்.
அந்த வகையில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கூட்டணியில் இடமில்லை. ஏனெனில் மக்கள் தம் மத்தியிலிருந்து வாக்குகளின் ஊடாக பிரதிநிதிகளை தேர்வு செய்வது அவர்களுக்காக சேவையாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆகும், அது தற்காலிகமான பதவியாகும். அந்த பதவியை வகிக்கும் காலகட்டத்தில் மக்களுக்காக சேவையாற்ற வேண்டியது அவசியமானதாகும்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுவடையதாக செய்வதற்கு ஏதுவான திட்டங்கள் வகுக்கப்படுவதுடன், உறுதியான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினரும் அச்சமின்றி இந்த கூட்டணியில் இணைந்து கொள்ளலாம். எம்முடன் கைகோர்த்த அனைவரையும் பாதுகாப்போம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்துடன், அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து சௌபாக்கியமும் செல்வச்செழிப்பும் மிகுந்த நாட்டை கட்டியெழுப்புவதன் ஊடாக மக்கள் யுகத்தை உருவாக்குவதே எமது நோக்காகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM